‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லைபணவீக்க மதிப்பீட்டை குறைத்தது ரிசர்வ் வங்கி ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லைபணவீக்க மதிப்பீட்டை குறைத்தது ... ...  தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம் தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பண புழக்கத்தை பெருக்கும் நடவடிக்கை தொடரும்:ஆர்.பி.ஐ., துணை கவர்னர் விரால் ஆச்சார்யா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:21

மும்பை:‘‘வங்கித் துறையில் தொடர்ந்து பணப் புழக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கை, நடப்பு நிதியாண்டு வரை தொடரும்,’’ என, ரிசர்வ் வங்கி துணை கவர்னர், விரால் ஆச்சார்யா தெரிவித்து உள்ளார்.


அவர் மேலும் கூறியதாவது:


ரிசர்வ் வங்கி, நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், வெளிச் சந்தையில் அரசு கடன் பத்திரங்கள், ரொக்க நிர்வாக பத்திரங்கள் போன்றவற்றின் ஏலம் மூலம், 1.36 லட்சம் கோடி ரூபாயை புழக்கத்தில் விட்டுள்ளது.கடந்த மூன்று மாதங்களில் மட்டும், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, வங்கித் துறையில் புழக்கத்திற்கு வந்துள்ளது.


கடந்த மாதம், ரிசர்வ் வங்கி, டிசம்பரில், 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, வெளிச் சந்தையில் அரசு கடன் பத்திரங்கள் வாங்கப்படும் என, தெரிவித்து இருந்தது.அதன்படி, இம்மாதம், அரசு கடன் பத்திரங்கள், ரொக்க நிர்வாக பத்திரங்கள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெற உள்ளது.இதில், குறுகிய கால முதிர்வைக் கொண்ட, ரொக்க நிர்வாக பத்திரங்கள் மூலமாக மட்டும், வங்கித் துறையில், 10 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு வரும்.


நிதிச் சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரிக்கும் இது போன்ற நடவடிக்கைகள், அடுத்த ஆண்டு, மார்ச் வரை தேவைப்படும் என, தெரிகிறது. அதுவரை, தொடர்ந்து, பணப் புழக்கத்திற்கு தேவையான நடவடிக்கைகளை, ரிசர்வ் வங்கி எடுக்கும்.எனினும், அது, சர்வதேச நிலவரங்கள், அன்னியச் செலாவணி மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றின் தாக்கத்தை பொறுத்தது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)