டுவிட்டர் தகவல்கள் டுவிட்டர் தகவல்கள் ...  மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும்: ‘பிட்ச் ரேட்டிங்க்ஸ்’ மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும்: ‘பிட்ச் ரேட்டிங்க்ஸ்’ ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இந்திய கார்களில் துருப்பிடிப்பு அதிகம்:ஐ.ஐ.டி., மும்பை ஆய்வில் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:25

சென்னை:இந்திய நுகர்வோர்களுக்காக தயாரிக்கப்படும் கார்களில், துத்தநாகம் பூசப்படும் பாகங்கள், -30 சதவீதமாகவும்; ஏற்றுமதி செய்யப்படும் கார்களில், 70 சதவீதமாகவும் இருக்கிறது என, ஐ.ஐ.டி., மும்பை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.


ஐ.ஐ.டி., மும்பை மற்றும் இன்டர்நேஷனல் ஸிங்க் அசோஷியேஷன் இணைந்து, பயணியர் கார் வாகனங்கள் தொடர்பாக, ‘பாதுகாப்புக்கே முதலிடம் – துருப்பிடித்தலின் ஆபத்து’ என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது.உலோகவியல் பொறியியல் துறையின் முன்னாள் பேராசிரியர் மற்றும் பிஎச்.டி., மாணவர்கள் இருவர் இணைந்து, இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.


இதில், கொப்புளங்கள், கட்டமைப்பின் மேற்பரப்பில் துருப்பிடித்தல், வெளியார்ந்த பேனல்கள் மற்றும் வாகன பாகங்களில் துளைகள் விழுதல் போன்ற செயல்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை தெரிந்து கொள்ள, பல்வேறு பிராண்டுகளைச் சேர்ந்த, 500 கார்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.


இந்த ஆய்வு அறிக்கை விபரம்:காற்றில் ஈரப்பதமிக்க பருவநிலை காரணமாக, சென்னை போன்ற கடற்கரையோர பகுதிகளில், காரின் பாகங்கள் அதிவேகமாக துருப்பிடிக்கின்றன. வாகன தொழில் துறையில், கார்கள் பயன்பாட்டு கால அளவை அதிகரிக்க, குறிப்பாக கடற்கரையோர பகுதிகளில், துத்தநாகம் பூசப்பட்ட ஸ்டீல் உலோகத்தை அதிகளவு பயன்படுத்துவது அவசியமாகும்.


இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கார்களில் துத்தநாகம் பூசப்படும் பாகங்கள், 70 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்திய நுகர்வோர்களுக்காக தயாரிக்கப்படும் கார்களில் இது, 15 முதல், -30 சதவீதமாக இருக்கிறது. எனவே, வாகனப் பாகங்களில் துருப்பிடித்தலையும், அரிப்பையும் தடுக்க, புதிய சட்டம் இயற்றப்பட வேண்டியது அவசியம்.


மேலும், 2008- முதல், 2016ம் ஆண்டுக்கு இடையே தயாரிக்கப்பட்ட கார்களை ஆய்வு செய்ததில், ஐந்து முதல், 10 ஆண்டுகள் வயதான வாகனங்களில் மிக அதிக அரிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)