பதிவு செய்த நாள்
07 டிச2018
00:25
சென்னை:இந்திய நுகர்வோர்களுக்காக தயாரிக்கப்படும் கார்களில், துத்தநாகம் பூசப்படும் பாகங்கள், -30 சதவீதமாகவும்; ஏற்றுமதி செய்யப்படும் கார்களில், 70 சதவீதமாகவும் இருக்கிறது என, ஐ.ஐ.டி., மும்பை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஐ.ஐ.டி., மும்பை மற்றும் இன்டர்நேஷனல் ஸிங்க் அசோஷியேஷன் இணைந்து, பயணியர் கார் வாகனங்கள் தொடர்பாக, ‘பாதுகாப்புக்கே முதலிடம் – துருப்பிடித்தலின் ஆபத்து’ என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது.உலோகவியல் பொறியியல் துறையின் முன்னாள் பேராசிரியர் மற்றும் பிஎச்.டி., மாணவர்கள் இருவர் இணைந்து, இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
இதில், கொப்புளங்கள், கட்டமைப்பின் மேற்பரப்பில் துருப்பிடித்தல், வெளியார்ந்த பேனல்கள் மற்றும் வாகன பாகங்களில் துளைகள் விழுதல் போன்ற செயல்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை தெரிந்து கொள்ள, பல்வேறு பிராண்டுகளைச் சேர்ந்த, 500 கார்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த ஆய்வு அறிக்கை விபரம்:காற்றில் ஈரப்பதமிக்க பருவநிலை காரணமாக, சென்னை போன்ற கடற்கரையோர பகுதிகளில், காரின் பாகங்கள் அதிவேகமாக துருப்பிடிக்கின்றன. வாகன தொழில் துறையில், கார்கள் பயன்பாட்டு கால அளவை அதிகரிக்க, குறிப்பாக கடற்கரையோர பகுதிகளில், துத்தநாகம் பூசப்பட்ட ஸ்டீல் உலோகத்தை அதிகளவு பயன்படுத்துவது அவசியமாகும்.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கார்களில் துத்தநாகம் பூசப்படும் பாகங்கள், 70 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்திய நுகர்வோர்களுக்காக தயாரிக்கப்படும் கார்களில் இது, 15 முதல், -30 சதவீதமாக இருக்கிறது. எனவே, வாகனப் பாகங்களில் துருப்பிடித்தலையும், அரிப்பையும் தடுக்க, புதிய சட்டம் இயற்றப்பட வேண்டியது அவசியம்.
மேலும், 2008- முதல், 2016ம் ஆண்டுக்கு இடையே தயாரிக்கப்பட்ட கார்களை ஆய்வு செய்ததில், ஐந்து முதல், 10 ஆண்டுகள் வயதான வாகனங்களில் மிக அதிக அரிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|