பதிவு செய்த நாள்
08 டிச2018
02:48
புதுடில்லி:மத்திய அரசின், தலைமை பொருளாதார ஆலோசகராக, கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளளார்.தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த, அரவிந்த் சுப்ரமணியன், ஜூலையில் பதவி விலகினார்.இதையடுத்து, இப்பதவியில், கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், மூன்று ஆண்டுகளுக்கு இப்பதவி வகிப்பார்.சென்னையைச் சேர்ந்த, கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், சென்னை, ஐ.ஐ.டி., – ஐ.ஐ.எம்.,ல் முதுகலை கல்வி முடித்து, சிகாகோ பூத் வணிக பல்கலையில், முனைவர் பட்டம் பெற்றவர்.அமெரிக்காவில், ஜே.பி.,மார்கன் சேஸ் நிறுவனத்தின் நிதி ஆலோசகராக பணியைத் துவக்கினார்.வங்கி, சட்டம், நிதி, பொருளாதார வளர்ச்சி ஆகியவை குறித்த இவரது ஆய்வறிக்கைகள், சர்வதேச இதழ்களில் வெளியாகியுள்ளன.
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்தில், நிறுவன நிர்வாகத்திற்கான வல்லுனர் குழு, ரிசர்வ் வங்கியின், வங்கி நிர்வாக குழு ஆகியவற்றில் இடம் பெற்றவர்.நிறுவன நிர்வாகம் மற்றும் வங்கி சீர்திருத்தங்களை வடிவமைத்ததில், முக்கிய பங்கு வகித்தவர்.தற்போது, சிகாகோ வர்த்தக பல்கலையைச் சேர்ந்த, நிதி ஆய்வு மையத்தின் செயல் இயக்குனர் மற்றும் நிதித் துறை இணை பேராசிரியராக உள்ளார்.ரிசர்வ் வங்கி முன்னாள்கவர்னர், ரகுராம் ராஜனின் சீடரான இவர், ‘சோட்டா ராஜன்’ என, வங்கி வட்டாரத்தில் செல்லமாக அழைக்கப்படுகிறார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|