தொடர் சரிவில்  மல்லிகை விலை   தொடர் சரிவில் மல்லிகை விலை ...  தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர் முதலிடம்:இந்தாண்டு 8,000 கோடி டாலரை எட்டும்: உலக வங்கி கணிப்பு தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர் முதலிடம்:இந்தாண்டு 8,000 கோடி ... ...
ஐ.டி.சி., நிறுவனத்தின் பெயரில் போலி இணையதள மோசடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2018
04:58

கோல்கட்டா:ஐ.டி.சி., நிறுவனத்தின் முத்திரையையும், அதன் தலைவர் பெயரையும் பயன்படுத்தி, போலியான இணையதளம் ஒன்றை உருவாக்கி, பொதுமக்களை ஏமாற்றி வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

பல்வேறு துறைகளில், வணிகம் செய்துவரும் மிகப் பெரும் நிறுவனங்களுள் ஒன்று, ஐ.டி.சி.,இந்நிறுவனத்தின் பெயரில் போலி இணையதளம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.‘ஐ.டி.சி., ஹாலிடேஸ்’ எனும் பெயர் கொண்ட அந்த இணையதளத்தில், ஐ.டி.சி., நிறுவனத்தின் முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்நிறுவனத்தின் தலைவர்என, ஐ.டி.சி., நிறுவனத்தின் தலைவரான ஒய்.சி.தேவேஸ்வர் பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேவேஸ்வர் இ – மெயில் முகவரி என வேறு போலியான முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஐ.டி.சி., நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர், நஸீப் அலி கூறியதாவது: கடந்த மாதம் தான் எங்களது கவனத்துக்கு இது வந்தது. அந்த இணையதளத்தில், ஐ.டி.சி., நிறுவனத்தின் பல்வேறு உயர்தர ஓட்டல்களுடன் கூட்டு வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் நம்பிக்கையை பெறும்வகையில், ஐ.டி.சி., முத்திரையையும் தலைவர் பெயரையும் பயன்படுத்தி உள்ளனர்.இது குறித்து, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தொழில் போட்டியில் உள்ளவர்கள் யாரும் இப்படி செய்திருப்பதாக நாங்கள் எண்ணவில்லை.நிச்சயம் குற்றவாளிகள் யார் என்பதை காவல் துறையினர் கண்டுபிடித்து தருவார்கள் என நம்புகிறோம். மேலும் யாராவது ஏமாந்திருக்கின்றாரா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)