பதிவு செய்த நாள்
09 டிச2018
23:40
வரி சேமிப்புக்கு உதவும் முதலீடுகளை நாடுபவர்கள் மத்தியில், இ.எல்.எஸ்.எஸ்., எனப்படும், ‘ஈக்விட்டு லிங்க்ட் சேவிங் ஸ்கீம்’ திட்டத்தின் மீதான ஆர்வம் அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
பொதுவாக ஜனவரி முதல், மார்ச் மாதம் வரையிலான காலம் வரிசேமிப்பிற்கான காலமாக கருதப்படுகிறது. வருமான வரி கணக்கு தாக்கலுக்கு, ‘80 சி’ பிரிவின் கீழ் வரிச்சலுகை பெறுவதற்கான முதலீடு தொடர்பான ஆவணங்களை ஊழியர்கள் அலுவலகத்தில் சமர்ப்பிக்கும்
காலமாக இது அமைகிறது.ஏற்கனவே வரி சேமிப்பிற்கான முதலீட்டை திட்டமிடாதவர்கள், இந்த காலத்தில் முதலீட்டை மேற்கொள்வதும் உண்டு.
ஜனவரி மாதம் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், வரி சேமிப்பை நாடுபவர்கள் பலரும்,
இ.எல்.எஸ்.எஸ்., திட்டம் பற்றி விசாரிக்கத் துவங்கியுள்ளனர் என, நிதி ஆலோசகர்கள்
கூறுகின்றனர்.
நிதியாண்டின் இறுதி காலாண்டு துவங்க உள்ள நிலையில், பலரும், இ.எல்.எஸ்.எஸ்., மற்றும்
வரி சேமிப்பிற்கான மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் பற்றி ஆர்வத்துடன் விசாரிப்பதாக நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.வரி சேமிப்பிலான முதலீட்டை பலரும் இறுதி கட்டத்தில்
மேற்கொள்ளும் பழக்கம் கொண்டுள்ளனர்.
எனினும், இதனால் முதலீட்டு வாய்ப்புகளை ஒப்பிட்டு பார்த்து சரியான முடிவு எடுக்க முடியாமல் போகும் என்றும், ஆண்டு ஆரம்பத்திலேயே வரி சேமிப்பு முதலீட்டை திட்டமிட்டு
மேற்கொள்வதே பொருத்தமாக இருக்கும் என்றும் நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
நிதியாண்டின் கடைசி காலாண்டில், இ.எல்.எஸ்.எஸ்., முதலீடு அதிகரிப்பது வழக்கமாக
இருக்கிறது என கூறும் நிதி ஆலோசகர்கள், இ.எல்.எஸ்.எஸ்., முதலீட்டை வழக்கமான முதலீடாக கருதி, ஆண்டு முழுவதும் சீரான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|