வாராக் கடன்கள் விரைவாக வசூலாகும்விஜய் மல்லையா ஒரு துவக்கம்: எஸ்.பி.ஐ., வாராக் கடன்கள் விரைவாக வசூலாகும்விஜய் மல்லையா ஒரு துவக்கம்: எஸ்.பி.ஐ., ...  ஆர்.பி.ஐ., கொள்கை மாறினால் பாதிப்பு பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் எச்சரிக்கை ஆர்.பி.ஐ., கொள்கை மாறினால் பாதிப்பு பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் எச்சரிக்கை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கோட்டக் மகிந்திரா வங்கியை கவனிிக்கும் பந்தனர் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2018
23:48

புதுடில்லி:நிறுவனர்களின் பங்கு மூலதனத்தை குறைப்பது தொடர்பான பிரச்னையில், மகிந்திரா கோட்டக் வங்கியின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது, பந்தன் வங்கி.


இது குறித்து பந்தன் வங்கி தரப்பில் கூறியதாவது:கோட்டக் மகிந்திரா வங்கி, அதன் நிறுவனர்களின் பங்கு மூலதனத்தை, இம்மாத இறுதிக்குள், 20 சதவீதமாக குறைக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி, கோட்டக் வங்கி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.


இதேபோல், பந்தன் வங்கிக்கும், நிறுவனர்களின் பங்கு மூலதனத்தை குறைக்குமாறு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.பந்தன் வங்கி, நிறுவனர்களின் பங்கு மூலதனத்தை, மூன்று ஆண்டுகளுக்குள், 82 சதவீதத்திலிருந்து, 40 சதவீதமாக, குறைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.ஆனால், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் உத்தரவை நிறைவேற்ற இயலாததால், புதிதாக கிளைகளை துவக்க, ரிசர்வ் வங்கி தடைவிதித்து விட்டது.


இந்நிலையில், கோட்டக் மகிந்திரா வங்கி, நீதிமன்றத்தை அணுகிஉள்ளதால், அது குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.இவ்வாறு வங்கி தரப்பில் கூறினர்.பந்தன் வங்கிக்கு தற்போது, 937 கிளைகள் உள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள், கிளைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


பந்தன் வங்கியின் தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான, சந்திரா சேகர் கோஷ் இது குறித்து கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)