ஆர்.பி.ஐ., கொள்கை மாறினால் பாதிப்பு பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் எச்சரிக்கை ஆர்.பி.ஐ., கொள்கை மாறினால் பாதிப்பு பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் எச்சரிக்கை ...  2 கோடி, ‘காண்டாக்ட்லெஸ் கார்டு’  விசா நிறுவனம் அறிவிப்பு 2 கோடி, ‘காண்டாக்ட்லெஸ் கார்டு’ விசா நிறுவனம் அறிவிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி புதிய கவர்னர் உறுதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2018
23:22

மும்பை:‘‘ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமம் காக்கப்படும்,’’ என, அதன் புதிய கவர்னர், சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.


மும்பையில், ரிசர்வ் வங்கியின், 25வது கவர்னராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:முதல் வேலையாக, பொதுத் துறை வங்கித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.ரிசர்வ் வங்கி, ஓர் உயரிய அமைப்பு; அதற்கு, நெடிய பாரம்பரிய வரலாறு உள்ளது. அதன் தன்னாட்சி சுதந்திரம், நம்பகத்தன்மை, நேர்மையான செயல்பாடு ஆகியவை தொடர்ந்து பேணப்படும் என, உறுதி கூறுகிறேன்.


ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில், நாட்டை நிர்வகிக்கும் அரசின் பங்கு முக்கியமானதாக உள்ளது. மத்திய அரசு உட்பட, ரிசர்வ் வங்கியுடன் தொடர்புள்ள ஒவ்வொரு அமைப்பின் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்படும்.மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உள்ள நல்லிணக்கம் தடைபட்டு உள்ளதாக நான் கருதவில்லை.


ரிசர்வ் வங்கியின் முக்கிய பணியாக, பணவீக்க இலக்கு நிர்ணயம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே, உர்ஜித் படேல் பதவி விலகினாரா என்ற கேள்விக்கு, பதில் அளிக்க அவர் மறுத்து விட்டார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)