பதிவு செய்த நாள்
13 டிச2018
11:51
மும்பை : ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் பதவியேற்றதை அடுத்து ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று (டிச.,13) ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுவதும், சர்வதேச சந்தையில் ரூபாய் மதிப்பு சரிவிலிருந்து மீண்டுள்ளதும் பங்குச்சந்தைகளின் உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 263.70 புள்ளிகள் உயர்ந்து 36,042.77 புள்ளிகளாகவும், நிப்டி 76.95 புள்ளிகள் உயர்ந்து 10,814.55 புள்ளிகளாகவும் இருந்தது. காலை 11.45 மணி நிலரப்படி சென்செக்ஸ் 166.04 புள்ளிகள் உயர்ந்து 35,945.11 புள்ளிகளாகவும், நிப்டி 50.25 புள்ளிகள் உயர்ந்து 10,787.85 புள்ளிகளாகவும் இருந்தன.
யெஸ் வங்கி, எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, பார்தி ஏர்டெல், இன்போசிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், விப்ரோ, ஐடிசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 3 சதவீதம் அதிகரித்துள்ளன. அதே சமயம் ஹீரோ மோட்டோ கார்ப், கோல் இந்தியா, எச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஒரு சதவீதம் சரிந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|