பதிவு செய்த நாள்
13 டிச2018
23:34
புதுடில்லி:மத்திய அரசு, ‘பாரத் இ.டி.எப்., 22’ திட்டத்தின் மூன்றாம் கட்ட வெளியீட்டை, அடுத்த ஆண்டு, ஜனவரியில் மேற்கொள்ள உள்ளது.
நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்து, 80 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தாண்டு, இதுவரை, பங்கு விலக்கல் மூலம், 33 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
இதில், இரு கட்டங்களில், ‘பாரத் இ.டி.எப்., 22’ வெளியீடுகள் மூலம் கிடைத்த, 22,900 கோடி ரூபாயும் அடங்கும்.
இத்திட்டத்திற்கு, முதலீட்டாளர்களிடம் அதிக வரவேற்பு காணப்படுகிறது.பற்றாக்குறை
இந்நிலையில், ‘ஏர் இந்தியா’ விற்பனை கைவிடப்பட்டதும், பவர் பைனான்ஸ், எஸ்.ஜே.வி.என்., நிறுவனங்களின் பங்கு விற்பனையின் தாமதம் காரணமாகவும், பங்கு விற்பனை இலக்கில், 15 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
அதனால், வரும் ஜனவரியில், மூன்றாம் கட்டமாக, ‘பாரத் இ.டி.எப்., 22’ வெளியீடு மேற்கொள்ள, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதில், 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை கிடைக்கும். அத்துடன், பொதுத் துறை நிறுவன பங்குகளை திரும்பப் பெறுவதன் மூலம், 10 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது
மேலும், 2019, பிப்ரவரிக்குள், ஆர்.இ.சி., நிறுவனத்தின், 52.63 சதவீத பங்குகளை, பவர் பைனான்ஸ் நிறுவனத்திற்கு விற்பதன் மூலம், 15 ஆயிரம் கோடி ரூபாய், மத்திய அரசுக்கு கிடைக்கும் எனத் தெரிகிறது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம், பங்கு விற்பனை இலக்கை எட்ட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
எந்தெந்த நிறுவனங்கள்?
கடந்த, 2017 நவம்பரில், பொதுத் துறையைச் சேர்ந்த, ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா உள்ளிட்ட, 16 நிறுவனங்கள், மூன்று வங்கிகள் மற்றும் மூன்று தனியார் நிறுவனங்களின் பங்குகள் அடங்கிய, ‘பாரத் இ.டி.எப்.,- 22’ திட்டம் அறிமுகமானது.இதில், பொதுத் துறையைச் சேர்ந்த, எஸ்.பி.ஐ., இந்தியன் பேங்க், பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகளும், தனியார் துறையைச் சேர்ந்த, ஆக்சிஸ் பேங்க், ஐ.டி.சி., எல் அண்டு டி ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், இத்திட்டம் பட்டியலிடப்பட்டு, வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|