இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவை இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவை ...  ‘தேசிய மின்னணு கொள்கை விரைவில் அறிமுகம் செய்யப்படும்’ ‘தேசிய மின்னணு கொள்கை விரைவில் அறிமுகம் செய்யப்படும்’ ...
சில்லரை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு:சி.ஐ.ஐ., யோசனைக்கு வியாபாரிகள் கூட்டமைப்பு கண்டனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2018
23:37

ஆமதாபாத்:‘பல்பொருள் சில்லரை விற்பனையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும்’ என, சி.ஐ.ஐ., விடுத்த கோரிக்கைக்கு, இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பான, எப்.ஏ.ஐ.வி.எம்., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


இது குறித்து, இக்கூட்டமைப்பின் தேசிய செயல் தலைவர், சி.எச்.கிருஷ்ணா கூறியதாவது: பல்பொருள் சில்லரை விற்பனையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என, சி.ஐ.ஐ., எனப்படும், இந்திய தொழிலக கூட்டமைப்பு, சமீபத்தில், மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


இந்த கூட்டமைப்பு, பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன் பெற, இந்த யோசனையை தெரிவித்துள்ளது. சிறு வியாபாரிகளுக்கான கொள்கைகளில், அரசுக்கு தவறான வழிகாட்டுதலை வழங்குகிறது.அமைப்பு சாராத சிறிய வர்த்தகப் பிரிவு, நாடு முழுவதும், 44 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. ஆனால், சி.ஐ.ஐ., கூட்டமைப்பில் உள்ள, அமைப்பு சார்ந்த நிறுவனங்கள், 2.50 கோடி பேருக்குத் தான் வேலைவாய்ப்பை வழங்குகின்றன.


பல்பொருள் துறையில், 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதித்தால், சிறிய வியாபாரிகள் பாதிக்கப்படுவர்.ஆகவே, சி.ஐ.ஐ., தெரிவித்த யோசனையை, மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது.அது மட்டுமின்றி, தற்போது, ஒரு பிராண்டு சில்லரை விற்பனையில் அனுமதிக்கப் பட்ட, 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டு கொள்கை குறித்தும், மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பல்பொருள் சில்லரை விற்பனையில், தற்போது, 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)