சில்லரை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு:சி.ஐ.ஐ., யோசனைக்கு வியாபாரிகள் கூட்டமைப்பு கண்டனம் சில்லரை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு:சி.ஐ.ஐ., யோசனைக்கு வியாபாரிகள் ... ...  ஆளில்லா விமானம் தயாரிக்கிறது அதானி ஆளில்லா விமானம் தயாரிக்கிறது அதானி ...
‘தேசிய மின்னணு கொள்கை விரைவில் அறிமுகம் செய்யப்படும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2018
23:34

புதுடில்லி:தேசிய மின்னணு கொள்கையை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் கூறி உள்ளார்.


நாட்டில் மின்னணு தயாரிப்புகளை அதிகரிப்பதற்கு உதவும் வகையில், தேசிய மின்னணு கொள்கை ஒன்றை இயற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது. இக்கொள்கை தற்போது இறுதி வடிவம் பெற்றுள்ளது. இது குறித்து, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:பிரதமர் மோடி, இந்தியாவை, 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர் டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்ற முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில், நாங்கள் மின்னணு கொள்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த பணியை நாங்கள் கிட்டத்தட்ட முடித்துவிட்டோம். விரைவில், பிரதமர் அறிமுகம் செய்ய உள்ளார்.


நாட்டில், 240 நிறுவனங்கள் மொபைல் போன் மற்றும் அதன் பாகங்களை தயாரித்து வருகின்றன. நொய்டா, மற்றும் கிரேட்டர் நொய்டா மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களின் மையமாக மாறி உள்ளது; இதன் மூலம், ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.மின்னணு துறையினர், மருத்துவம், ராணுவம் மற்றும் வாகனப் பிரிவுகளிலும் சாதனங்களை தயாரிப்பதில் பார்வையை செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


கடந்த, 2012ம் ஆண்டில், முதல் தேசிய மின்னணு கொள்கை உருவாக்கப்பட்டது. மின்னணு பொருட்களை தயாரிக்கும் ஆலைகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கும் வகையில் இக்கொள்கை வகுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)