பதிவு செய்த நாள்
14 டிச2018
23:34
புதுடில்லி:தேசிய மின்னணு கொள்கையை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் கூறி உள்ளார்.
நாட்டில் மின்னணு தயாரிப்புகளை அதிகரிப்பதற்கு உதவும் வகையில், தேசிய மின்னணு கொள்கை ஒன்றை இயற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது. இக்கொள்கை தற்போது இறுதி வடிவம் பெற்றுள்ளது. இது குறித்து, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:பிரதமர் மோடி, இந்தியாவை, 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர் டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்ற முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில், நாங்கள் மின்னணு கொள்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த பணியை நாங்கள் கிட்டத்தட்ட முடித்துவிட்டோம். விரைவில், பிரதமர் அறிமுகம் செய்ய உள்ளார்.
நாட்டில், 240 நிறுவனங்கள் மொபைல் போன் மற்றும் அதன் பாகங்களை தயாரித்து வருகின்றன. நொய்டா, மற்றும் கிரேட்டர் நொய்டா மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களின் மையமாக மாறி உள்ளது; இதன் மூலம், ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.மின்னணு துறையினர், மருத்துவம், ராணுவம் மற்றும் வாகனப் பிரிவுகளிலும் சாதனங்களை தயாரிப்பதில் பார்வையை செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த, 2012ம் ஆண்டில், முதல் தேசிய மின்னணு கொள்கை உருவாக்கப்பட்டது. மின்னணு பொருட்களை தயாரிக்கும் ஆலைகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கும் வகையில் இக்கொள்கை வகுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|