பதிவு செய்த நாள்
14 டிச2018
23:48
புதுடில்லி:நாட்டின் மொத்த விலை பணவீக்கம், நவம்பரில், 4.64 சதவீதமாக வீழ்ச்சி கண்டு உள்ளது. இது, அக்டோபரில், 5.28 சதவீதம்; கடந்த ஆண்டு, நவம்பரில், 4.02 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது.
காய்கறிகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலை சரிவால், மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் குறைந்துள்ளது.இதற்கு முன், ஆகஸ்டில், மொத்த விலை பணவீக்கம், 4.62 சதவீதமாக இருந்தது.உணவுப் பொருட்கள் பிரிவின் பணவீக்கம், மைனஸ், 3.31 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, அக்டோபரில், 1.49 சதவீதமாக இருந்தது.இதே காலத்தில், காய்கறிகள் பணவீக்கம், 18.65 சதவீதத்தில் இருந்து, மைனஸ், 26.98 சதவீதமாக குறைந்துள்ளது.
எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்கம், 18.44 சதவீதத்தில் இருந்து, 16.28 சதவீதமாக இறக்கம் கண்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைவால், இந்த சரிவு சாத்தியமாகி உள்ளது. பெட்ரோல்அக்டோபரில், பெட்ரோல், டீசல் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவின் மொத்த விலை பணவீக்கம் முறையே, 12.06; 20.16 மற்றும் 23.22 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து இருந்தன.
காய்கறிகளில், உருளைக்கிழங்கு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து, 86.45 சதவீதமாக உயர்ந்துள்ளது.அதேசமயம், வெங்காய பணவீக்கம், மைனஸ், 47.60 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. பருப்பு வகைகள் பணவீக்கம், 5.42 சதவீதமாக மாற்றமின்றி உள்ளது.இந்த விபரங்களை, மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
வட்டி குறைய வாய்ப்பு
ரிசர்வ் வங்கி, சில்லரை விலை பணவீக்கத்தை அடிப்படையாக வைத்து, கொள்கை முடிவுகளை எடுக்கிறது. கடந்த நவம்பரில், சில்லரை விலை பணவீக்கம், 17 மாதங்களில் இல்லாத அளவு, 2.33 சதவீதமாக குறைந்துள்ளது.அதனால், 2019, பிப்ரவரியில் நடைபெற உள்ள, ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், வட்டி விகிதம் குறைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|