பதிவு செய்த நாள்
16 டிச2018
05:39
புதுடில்லி:ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமம், நிதி நெருக்கடி காரணமாக, ஆடம்பர கார்கள், அலுவலக மரச்சாமான்கள், மின் சாதனங்கள் ஆகியவற்றை விற்பனை செய்கிறது.
இக்குழுமம், மின்சாரம், நெடுஞ்சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகளில், 1.89 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.அதேசமயம், 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால், இக்குழுமம் சமீபகாலமாக, பல முறை கடன் தவணையை திரும்பச் செலுத்த தவறியது.
இதையடுத்து, மத்தியஅரசு, இக்குழுமத்தின் இயக்குனர் குழுவை கலைத்து, உதய் கோட்டக் தலைமையில், புதிய இயக்குனர் குழுவை நியமித்தது.இதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சிக்கன நடவடிக்கைகளில் ஒன்றாக, ஆடம்பர கார்கள், மின் சாதனங்கள், அலுவலகங்களில் உள்ள மரச்சாமான்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட உள்ளன.
இதற்காக வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பி.எம்.டபிள்யு, ஜாகுவார், மெர்சிடெஸ் பென்ஸ்’ உள்ளிட்ட, 36 ஆடம்பர கார்களுக்கு, குறைந்தபட்ச விலையாக, 9 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மும்பை மற்றும் கோல்கட்டா அலுவலகங்களில் உள்ள மரச்சாமான்களுக்கு, தனியே ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|