வங்கிகளில் 1 லட்சம் பேருக்கு வேலை வங்கிகளில் 1 லட்சம் பேருக்கு வேலை ...  அக்., – டிச., காலாண்டில் ஏற்றுமதி 7 சதவீதம் உயரும் அக்., – டிச., காலாண்டில் ஏற்றுமதி 7 சதவீதம் உயரும் ...
ரிசர்வ் வங்கிக்கு எதிரான கோட்டக் மனு தள்ளுபடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2018
07:02

புதுடில்லி: நிறுவனர்களின் பங்கு மூலதனத்தை குறைப்பது தொடர்பான, ரிசர்வ் வங்கியின் உத்தரவை நிறுத்தக் கோரிய, கோட்டக் மகிந்திரா வங்கியின் மனுவை, மும்பை ஐகோர்ட், நேற்று தள்ளுபடி செய்தது.ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, கோட்டக் மகிந்திரா வங்கியில், இம்மாத இறுதிக்குள் நிறுவனர்களின் பங்கு மூலதனம், 20 சதவீதம்; 2020, மார்ச்சுக்குள், 15 சதவீதம்; அதன்பின், 10 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும்.அதன்படி, கோட்டக் மகிந்திரா நிறுவனர் மற்றும் குடும்பத்தாரின், 10 சதவீத பங்குகள், ஆகஸ்டில், ‘பி.என்.சி.பி.எஸ்.,’ எனப்படும் முன்னுரிமை அடிப்படையில், மாற்றப்பட்டன.இதையடுத்து, நிறுவனரின் பங்கு மூலதனம், 29.70 சதவீதத்தில் இருந்து, 19.70 சதவீதமாக குறைந்தது.ஆனால், உரிய விதிகளின்படி, பங்கு மூலதனம் குறைக்கப்படவில்லை என, ரிசர்வ் வங்கி கூறியதால், வங்கி நிறுவனர் உதய் கோட்டக்கிற்கு, இம்மாதத்திற்குள், 10 சதவீத பங்கை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என, கோட்டக் மகிந்திரா வங்கி, மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.நேற்று, இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், ரிசர்வ் வங்கி உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.இந்நிலையில், உதய் கோட்டக்கின், 10 சதவீத பங்குகளை, வாரன் பபெட்டின், ஹாத்வே பெர்க் ஷையர் வாங்க உள்ளதாக, தகவல் கசிந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)