பதிவு செய்த நாள்
18 டிச2018
07:02
புதுடில்லி: நிறுவனர்களின் பங்கு மூலதனத்தை குறைப்பது தொடர்பான, ரிசர்வ் வங்கியின் உத்தரவை நிறுத்தக் கோரிய, கோட்டக் மகிந்திரா வங்கியின் மனுவை, மும்பை ஐகோர்ட், நேற்று தள்ளுபடி செய்தது.ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, கோட்டக் மகிந்திரா வங்கியில், இம்மாத இறுதிக்குள் நிறுவனர்களின் பங்கு மூலதனம், 20 சதவீதம்; 2020, மார்ச்சுக்குள், 15 சதவீதம்; அதன்பின், 10 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும்.அதன்படி, கோட்டக் மகிந்திரா நிறுவனர் மற்றும் குடும்பத்தாரின், 10 சதவீத பங்குகள், ஆகஸ்டில், ‘பி.என்.சி.பி.எஸ்.,’ எனப்படும் முன்னுரிமை அடிப்படையில், மாற்றப்பட்டன.இதையடுத்து, நிறுவனரின் பங்கு மூலதனம், 29.70 சதவீதத்தில் இருந்து, 19.70 சதவீதமாக குறைந்தது.ஆனால், உரிய விதிகளின்படி, பங்கு மூலதனம் குறைக்கப்படவில்லை என, ரிசர்வ் வங்கி கூறியதால், வங்கி நிறுவனர் உதய் கோட்டக்கிற்கு, இம்மாதத்திற்குள், 10 சதவீத பங்கை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என, கோட்டக் மகிந்திரா வங்கி, மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.நேற்று, இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், ரிசர்வ் வங்கி உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.இந்நிலையில், உதய் கோட்டக்கின், 10 சதவீத பங்குகளை, வாரன் பபெட்டின், ஹாத்வே பெர்க் ஷையர் வாங்க உள்ளதாக, தகவல் கசிந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|