பதிவு செய்த நாள்
18 டிச2018
23:18
மும்பை : ‘‘நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளில், பங்கின் விலையை சரியாக நிர்ணயிக்க வேண்டும்,’’ என, வணிக வங்கிகளை, ‘செபி’ தலைவர், அஜய் தியாகி அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:பங்குச் சந்தை நிலவரம் நன்கு உள்ள போதிலும், புதிய பங்கு வெளியீடுகள் மந்தமாக உள்ளன. இந்தாண்டு, 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு வெளியீடுகளுக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பல நிறுவனங்கள் இன்னும், பங்கு வெளியீடு மேற்கொள்ளவில்லை.
கடந்த ஆண்டு, 120 நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகள் மூலம், சாதனை அளவாக, 67ஆயிரத்து, 147 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. இந்தாண்டு, அக்டோபர் நிலவரப்படி, 24 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 30ஆயிரத்து, 959 கோடி ரூபாய் திரட்டியுள்ளன. இதில், பெரும்பகுதி, ஜனவரி – மார்ச் காலாண்டில் திரட்டப்பட்டதாகும்.
சந்தை நிலவரம் நன்கு உள்ள போதிலும், பங்கு வெளியீடுகள் குறைந்துள்ளது கவலை அளிக்கிறது. பங்கு வெளியீடுகளை நிர்வகிக்கும், வணிக வங்கிகள், நிறுவனத்திற்கும், முதலீட்டாளர்களுக்கும் ஏற்றவாறு, பங்கின் விலையை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|