பதிவு செய்த நாள்
18 டிச2018
23:21
தமிழகத்தில், ஆறு மாதம் தொடர்ந்து, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யாதவர்களின், ஜி.எஸ்.டி., பதிவை ரத்து செய்ய, வணிக வரித் துறை ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில், ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு பின், வரி கணக்கு தாக்கல் என்பது, வணிகர்களின் பரிவர்த்தனைகளைப் பொறுத்து, கால அவகாசம் மாறுபடுகிறது.இந்நிலையில், பல மாதங்கள் தொடர்ந்து, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யாதவர்களின் பதிவை ரத்து செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து வணிக வரி துறை அதிகாரிகள் கூறியதாவது: வணிகர்களின் ஆண்டு வணிகத்தைப் பொறுத்து, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் வழங்கப்படுகிறது. இதில், மாதந்தோறும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என, அவகாசம் வழங்கப்படுகிறது. ஆனால், பல வணிகர்கள் ஆறு மாதங்களுக்கு மேலாக, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யாமல் உள்ளனர். இவ்வாறு இருக்கும் வணிகர்களின், ஜி.எஸ்.டி., பதிவை ரத்து செய்ய, ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், வரி நிலுவை இருக்கும் வணிகர்களின் பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டுள்ளார். அதில், அதிக தொகை நிலுவையில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றை உடனடியாக வசூலிக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|