தவிக்கும் முதலீட்டாளர்களுக்கு வாரன் பபெட் சொன்ன கவிதை தவிக்கும் முதலீட்டாளர்களுக்கு வாரன் பபெட் சொன்ன கவிதை ...  ஜி.எஸ்.டி., வரியை குறைக்க ஆடம்பர ஓட்டல்கள் கோரிக்கை ஜி.எஸ்.டி., வரியை குறைக்க ஆடம்பர ஓட்டல்கள் கோரிக்கை ...
சேகோ ஆலைகள் இரண்டு நாள் விடுமுறை அரசு நடவடிக்கைக்கு கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2018
23:40

ஈரோடு : மரவள்ளி கிழங்கு அறுவடை நடந்து வரும் நிலையில், சேகோ ஆலைகள், வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை விடுவதால், மரவள்ளி கிழங்கு தேக்கமடைந்து, விலை சரிந்து வருவதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி, அந்தியூர், சத்தி, கோபி, பவானி, கொடுமுடி, சேலம் மாவட்டம் ஆத்துார், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உட்பட பல இடங்களில், மரவள்ளி கிழங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. தற்போது, 1 டன் மரவள்ளி கிழங்கு, 5,500 முதல், 5,800 ரூபாய்க்கு கொள்முதலாகிறது. அதேபோல், 90 கிலோ மூட்டை ஜவ்வரிசி, 3,200 ரூபாய், ஸ்டார்ச், 2,400 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

மரவள்ளி கிழங்கு அறுவடை, தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் சேலம், ஆத்துார், ராசிபுரம் பகுதிகளில் உள்ள சேகோ ஆலைகள், உற்பத்தியை குறைத்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு விலையை உயர்த்தும் வகையில், வாரம் இரண்டு நாள், ஆலைக்கு விடுப்பு அளிக்கின்றன. அறுவடை நேரத்தில் விடுமுறை விடுவதால், மரவள்ளி கிழங்கு தேக்கமாகி, விலை சரிவதாக, விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர், சுதந்திரராசு கூறியதாவது:அறுவடை நடந்து வரும் நிலையில், ஆலைகளை மூடுவது தவறாகும். இதை, அந்தந்த மாவட்ட நிர்வாகமும், அரசும் அனுமதிக்கக் கூடாது. ஈரோடு மாவட்டத்தில் தினமும், 400 டன் மரவள்ளி கிழங்கு அறுவடையாகி, தேக்கமடைகிறது. இதனால் விலை சரிவு, வீணாவது அதிகரிக்கும். அரசு தலையிட்டு, முழு அளவில் கொள்முதல் செய்து, ஆலையை இயக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)