ஜி.எஸ்.டி., வரியை குறைக்க ஆடம்பர ஓட்டல்கள் கோரிக்கை ஜி.எஸ்.டி., வரியை குறைக்க ஆடம்பர ஓட்டல்கள் கோரிக்கை ...  3 வங்கிகள் இணைப்புக்கு சிறப்பு குழு ஒப்புதல் 3 வங்கிகள் இணைப்புக்கு சிறப்பு குழு ஒப்புதல் ...
‘ஐ.நா., நிலையான வளர்ச்சி இலக்கு’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2018
00:00

புதுடில்லி : இந்தியாவின், ‘ஐ.நா., நிலையான வளர்ச்சி இலக்கு’ குறியீட்டில், தமிழகம், இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

ஐ.நா., 2015, செப்டம்பரில், ‘சர்வதேச நிலையான வளர்ச்சி இலக்கு’ என்ற குறியீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.இதில், 16 இலக்குகள் அடிப்படையில், பல்வேறு சமூகங்களின் பொருளாதாரம், கலாசாரம், வளர்ச்சி, வாழ்க்கை முறை ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்த, குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசின் கொள்கைகளை உருவாக்கும், ‘நிடி ஆயோக்’ அமைப்பு, மத்திய புள்ளியியல் துறையுடன் இணைந்து, இந்தாண்டு, முதன் முறையாக, இந்திய மாநிலங்களின் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டை தயாரித்துள்ளது.

மாநில அரசுகளிடம், நான்கு பிரிவுகளில் போதுமான புள்ளி விபரம் இல்லாததால், 12 இலக்குகள் அடிப்படையில், ஐ.நா., மற்றும் சர்வதேச பசுமை வளர்ச்சி மையத்தின் ஆதரவுடன், குறியீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், சிறப்பான செயல்பாடுகளை கொண்ட மாநிலங்களில், ஹிமாச்சல பிரதேசம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகம் இரண்டாவது இடத்தையும், கேரளா, மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.மாநிலங்களின் செயல்பாடுகளை மதிப்பிட உதவும் இந்த குறியீடு, இனி ஆண்டுதோறும் வெளியிடப்படும் என, நிடி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி வேண்டும் :
இந்தியா, 2030ல் பல்வேறு துறைகளில் எட்ட வேண்டிய வளர்ச்சி இலக்கை நிர்ணயித்துள்ளது. இதை அடைய, மாநில அரசுகளின் சமூக, பொருளாதார முன்னேற்ற கொள்கைகளும், செயல்பாடுகளும் இன்றியமையாதவையாக உள்ளன. அதனால், மாநிலங்கள் இடையே, முன்னேறுவதற்கான போட்டியை ஏற்படுத்த, ‘ஐ.நா., நிலையான வளர்ச்சி இலக்கு’ குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

– அமிதாப் காந்த், தலைமை செயல் அதிகாரி, ‘நிடி ஆயோக்’

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)