1 லட்சம் போலி நிறுவனங்கள் நீக்கம்: மத்திய அரசு அதிரடி1 லட்சம் போலி நிறுவனங்கள் நீக்கம்: மத்திய அரசு அதிரடி ... வங்கி இணைப்பு – மின்னணு பண பரிவர்த்தனையின் தாக்கம்  ஏ.டி.எம்., மையங்கள் பயன்பாடு குறைவு வங்கி இணைப்பு – மின்னணு பண பரிவர்த்தனையின் தாக்கம் ஏ.டி.எம்., மையங்கள் ... ...
வலைதள உணவு நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி; நுகர்வோர் பாதுகாப்புக்கு புதிய விதிமுறைகள் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2018
04:30

புதுடில்லி : நுகர்­வோ­ருக்கு தர­மான, பாது­காப்­பான உணவு வகை­கள் கிடைக்க வேண்­டும் என்ற நோக்­கத்­தில், வலை­தள உணவு சேவை நிறு­வ­னங்­க­ளுக்கு புதிய விதி­மு­றை­களை, மத்­திய உணவு பாது­காப்பு மற்­றும் தர கட்­டுப்­பாட்டு ஆணை­யம் வெளி­யிட்­டுள்­ளது.

‘குரோ­பர்ஸ், பிக்­பேஸ்­கட்’ போன்ற வலை­தள சந்தை நிறு­வ­னங்­கள், காய்­க­றி­கள், பழங்­கள், உண­வுப் பொருட்­கள் ஆகி­ய­வற்றை, நுகர்­வோர் வீட்­டிற்கே சென்று கொடுக்­கின்­றன. அது­போல, ‘ஸ்விக்கி, ஸொமாடோ’ போன்ற வலை­தள சந்தை நிறு­வ­னங்­கள், உணவு வகை­களை சப்ளை செய்­கின்­றன.

கண்காணிப்பு :
இந்த வலை­தள சந்தை நிறு­வ­னங்­கள், உண­வ­கங்­க­ளுக்­கும், நுகர்­வோ­ருக்­கும் இடையே பால­மாக செயல்­பட்டு, குறிப்­பிட்ட கட்­ட­ணத்தை பெறு­கின்­றன. இது போன்ற நிறு­வ­னங்­க­ளின் சேவை குறித்து, பல்­வேறு புகார்­கள் எழுந்­ததை அடுத்து, உண­வுப் பொருட்­கள் வினி­யோ­கம் தொடர்­பான விதி­மு­றை­களை, மத்­திய உணவு பாது­காப்பு மற்­றும் தர கட்­டுப்­பாட்டு ஆணை­யம் கடு­மை­யாக்­கி­யுள்­ளது.

இது குறித்து, ஆணை­யத்­தின் தலைமை செயல் அதி­காரி, பவன் அகர்­வால் கூறி­ய­தா­வது: நுகர்­வோர், வலை­தள சந்தை நிறு­வ­னங்­கள் மூலம் உணவு வகை­களை வாங்­கு­வது அதி­க­ரித்­து உள்­ளது. அத­னால், நுகர்­வோ­ருக்கு பாது­காப்­பான உணவு கிடைப்­பதை உறுதி செய்ய, கண்­கா­ணிப்பு நடை­மு­றை­களை தீவி­ரப்­ப­டுத்த முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இதை­யொட்டி, உண­வுப் பொருட்­களை விற்­பனை செய்­யும் வலை­தள சந்தை நிறு­வ­னங்­க­ளுக்கு புதிய விதி­மு­றை­கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. அதன்­படி, உண­வுப் பொருட்­களை கொண்டு செல்­லும் வழி­யில், எங்கு வேண்­டு­மென்­றா­லும், உண­வின் மாதி­ரியை சோத­னை­ இ­ட­லாம். நிறு­வ­னங்­கள், நுகர்­வோர் குறிப்­பி­டும் உண­வு­கள் குறித்த படங்­களை, அவற்­றின் வலை­த­ளத்­தில் வெளி­யிட வேண்­டும்

காலாவதி காலம் :
உணவு பாது­காப்பு மற்­றும் தரக் கட்­டுப்­பாட்டு ஆணை­யத்­தின் சட்ட விதி­மு­றை­களை, வலை­தள சந்தை நிறு­வ­னங்­கள், நுகர்­வோ­ருக்கு தெரி­விக்க வேண்­டி­யது கட்­டா­ய­மாக்­கப்­பட்டு உள்­ளது. இந்­நி­று­வ­னங்­கள், புதிய உண­வு­க­ளையே, நுகர்­வோ­ருக்கு வழங்க வேண்­டும் என, விதி­முறை கூறு­கிறது.

உண­வுப் பொருட்­கள் சப்ளை செய்­யப்­படும் போது, அப்­பொ­ருட்­க­ளின் எஞ்­சிய காலா­வதி காலம், 30 சத­வீ­த­மா­கவோ அல்­லது, 45 நாட்­க­ளுக்கு முன்­ன­தா­கவோ இருக்க வேண்­டும். அதா­வது, ஒரு உண­வுப் பொரு­ளின் காலா­வதி காலம், 60 நாட்­கள் என வைத்­துக் கொண்­டால், அதன் சப்ளை, 15 நாட்­க­ளுக்­குள் இருக்க வேண்­டும். இந்த விதி­மு­றை­களை, வலை­தள சந்தை நிறு­வ­னங்­கள் கண்­டிப்­பாக பின்­பற்ற வேண்­டும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

விதிமுறைகள்:
* உண­வுப் பொருட்­களை கொண்டு செல்­லும் வழி­யில் சோதனை
* வலை­த­ளத்­தில், ‘ஆர்­டர்’ செய்­யும் உண­வின் படம் இருக்க வேண்­டும்
* உணவு பாது­காப்பு மற்­றும் தரக் கட்­டுப்­பாட்டு சட்ட விதி­களை, நுகர்­வோ­ருக்கு தெரி­விக்க வேண்­டும்.
* புத்­தம் புதிய உண­வுப் பொருட்­கள் மட்­டுமே நுகர்­வோ­ருக்கு வழங்க வேண்­டும்
* உண­வுப் பொருட்­களை, காலா­வதி ஆவ­தற்கு, 45 நாட்­க­ளுக்கு முன் சப்ளை செய்ய வேண்­டும்.

நுகர்­வோர் பாது­காப்பு முக்­கி­யம்:
நுகர்­வோ­ருக்கு பாது­காப்­பான உணவு கிடைக்க வேண்­டும் என்­ப­தற்­காக, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அறி­வித்­துள்ள புதிய விதி­மு­றை­களை வர­வேற்­கி­றோம். உணவு பாது­காப்பு மிக­வும் முக்­கி­ய­மா­னது. உண­வ­கங்­களில் இருந்து, நுகர்­வோ­ருக்கு உணவு சப்ளை செய்­வது வரை­யில், அதன் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த கடு­மை­யான நட­வ­டிக்கை எடுத்­துள்­ளோம். தர­மற்ற உணவு வகை­கள் சப்ளை செய்த, 1,000த்திற்­கும் அதி­க­மான உண­வ­கங்­களை, வலை­த­ளத்­தில் இருந்து சமீ­பத்­தில் நீக்­கி­யுள்­ளோம்.
-ஸொமாடோ நிறுவனம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)