வங்கி இணைப்பு – மின்னணு பண பரிவர்த்தனையின் தாக்கம்  ஏ.டி.எம்., மையங்கள் பயன்பாடு குறைவுவங்கி இணைப்பு – மின்னணு பண பரிவர்த்தனையின் தாக்கம் ஏ.டி.எம்., மையங்கள் ... ...  இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு குறையும் : அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு எச்சரிக்கை இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு குறையும் : அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு ... ...
சபரிமலை சீசனால் நுகர்வு சரிவு : முட்டைக்கோழி கொள்முதல் விலை, ‘டவுன்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2018
00:31

நாமக்கல்: சபரிமலை சீசனால், கேரளாவில் முட்டைக் கோழி நுகர்வு சரிந்துள்ளது. மேலும், ஐதராபாத் மண்டலத்தில், கொள்முதல் விலை, 50 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், நாமக்கல் மண்டலத்தில், முட்டைக் கோழி கொள்முதல் விலையை குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், 80 வாரம் வரை, முட்டையிடும். அதன்பின், இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகிறது. மாதந்தோறும், 25 லட்சம், வயது முதிர்ந்த முட்டைக் கோழிகள், கர்நாடகா, கேரள மாநிலத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றன.இதன் விலையை, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவான, ‘நெக்’ வியாபாரிகள் முடிவு செய்கின்றனர். முட்டை விலை உயரும்போது, முட்டைக் கோழி தட்டுப்பாடு ஏற்படும். அந்த நேரத்தில், 85 – 90 வாரம் வரை வைத்திருந்து விற்பனை செய்வர்.மேலும், முட்டை விலை குறையும் போது, 75 வாரத்திலேயே விற்பனை செய்துவிடுவர். கடந்த, 1ல், 83 ரூபாய்; 5ல், 84 ரூபாய் எனவும், கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.அதையடுத்து, 17ல், 3 ரூபாய் குறைந்து, 81ம்; 18ல், 7 ரூபாய் குறைக்கப்பட்டு, 74 எனவும், நேற்று முன்தினம், 2 ரூபாய் சரிந்து, 72 ரூபாய் எனவும், கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.முட்டைக் கோழி கொள்முதல் விலை, 22 நாட்களில், 12 ரூபாய் சரிந்துள்ளது, பண்ணையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இது, மேலும் சரிய வாய்ப்பு உள்ளதால், அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர், வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:வயது முதிர்ந்த முட்டைக் கோழிகள், கர்நாடகாவுக்கு, 60 சதவீதமும்; கேரளாவுக்கு, 40 சதவீதமும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கோழிகள், முட்டை விலை ஏற்றம், இறக்கத்தை பொறுத்து, விலை நிர்ணயம் செய்யப்படும்.கறிக்கோழி விலை, எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. கேரளாவில், அய்யப்பன் சீசன் விரதம் கடைப்பிடிப்பதால், அங்கு, நுகர்வு சரிந்துள்ளது. மேலும், தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் மண்டலத்தில், கொள்முதல் விலை, 50 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு, அதே விலைக்கு கோழிகளை விற்பனை செய்கின்றனர்.ஆனால், நாமக்கல் மண்டலத்தில், 72 ரூபாய் நிர்ணயம் செய்திருந்தாலும், 12 ரூபாய் குறைத்து, வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். தற்போது, 14 ரூபாய் குறைத்து, 58 ரூபாய்க்கே கோழிகளை பிடித்துச் செல்கின்றனர்.அதனால், முட்டைக் கோழி கொள்முதல் விலையை, பண்ணையாளர்கள் குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கார்த்திகை மாதம் முடிந்து, தை பிறந்தால் தான் விலை உயரும்.தற்போதுள்ள சூழ்நிலையில், கொள்முதல் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)