புதிய வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ சாதனை புதிய வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ சாதனை ...  தங்கம் விலை சரிவு வெள்ளி உயர்ந்தது தங்கம் விலை சரிவு வெள்ளி உயர்ந்தது ...
அன்பளிப்பு பொருட்கள் இறக்குமதியில் முறைகேடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2019
05:51

புதுடில்லி:அன்பளிப்பு பொருட்கள் இறக்குமதியில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து, அவற்றுக்கான சுங்க வரி விலக்கு சலுகையை ரத்து செய்வது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

தற்போது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும், 5,000 ரூபாய் மதிப்புள்ள அன்பளிப்பு பொருட்களுக்கு, சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.இதை பயன்படுத்தி, சீன வலைதள நிறுவனங்கள், வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார் எழுந்துஉள்ளது.இந்தியாவில் இருந்து, சீன வலைதள நிறுவனங்களுக்கு தினமும் ஏராளமான, ‘ஆர்டர்’கள் கிடைக்கின்றன.

அவற்றின் வினியோகத்தில், வாய்ப்புள்ள பொருட்களில் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக, தொழில் துறையின் சில பிரிவினர், மத்திய அரசுக்கு புகார் அளித்துள்ளனர்.இதையடுத்து, அன்பளிப்பு பொருட்களுக்கான சுங்க வரியை ரத்து செய்வது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:அன்பளிப்பு பொருட்களின் சுங்க வரிச் சலுகையை, சில நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் வருகின்றன. இது குறித்து, தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சி துறை செயலர் தலைமையிலான நிலைக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.அப்போது, 5,000 ரூபாய் வரையிலான அன்பளிப்பு பொருட்கள் இறக்குமதிக்கு, சுங்க வரி விலக்கை ரத்து செய்யலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வரி விலக்கை ரத்து செய்யாமல், ஒருவர் ஆண்டுக்கு, நான்கு முறை மட்டுமே, அன்பளிப்பு பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கலாமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், சந்தேகத்திற்கிடமான நபர்கள், பொருட்களை அனுப்பும் நாடுகள் ஆகியவை குறித்து, தீவிரமாக கண்காணிக்குமாறு, மத்திய வருவாய் துறையை கேட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது.விரைவில், அன்பளிப்பு பொருட்களுக்கான சுங்க வரி விலக்கு குறித்து முடிவு எடுக்கப்படும் என, தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)