பொருட்களை வாங்கி குவிக்கும் இந்தியர்கள் உலக பொருளாதார கூட்டமைப்பு  ஆய்வறிக்கை வெளியீடு பொருட்களை வாங்கி குவிக்கும் இந்தியர்கள் உலக பொருளாதார கூட்டமைப்பு ... ...  ‘ஏர் இந்தியா’ பங்கு விற்பனையில் ரூ.7,000 கோடி திரட்ட திட்டம் ‘ஏர் இந்தியா’ பங்கு விற்பனையில் ரூ.7,000 கோடி திரட்ட திட்டம் ...
ஜி.எஸ்.டி., கவுன்சில் இன்று கூடுகிறது :சிறிய நிறுவனங்களுக்கு சலுகைகள் கிடைக்க வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2019
23:17

புதுடில்லி:டில்லியில் இன்று, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், சிறிய நிறுவனங்கள், வீடு வாங்குவோருக்கான சலுகை குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:


மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில், 32வது, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், டில்லியில் நடைபெற உள்ளது.ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி., பதிவிற்கான, ஆண்டு விற்று முதல் வரம்பு, 20 லட்சத்தில் இருந்து, 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.இதனால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பயனடையும்.


ரியல் எஸ்டேட்


வீடு வாங்குவோர் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளுக்கு வரி குறைப்பு உள்ளிட்ட சலுகைகள் குறித்தும், இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிது.கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள் மற்றும் கட்டி முடித்த சான்று இல்லாத, அதேசமயம், குடி புக ஏற்ற வீடுகளுக்கு தற்போது, 12 சதவீத, ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படுகிறது.இதை, 5 சதவீதமாக குறைப்பது குறித்து, கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.


வீடுகள் விற்பனையின் போது, கட்டி முடிக்கப்பட்ட சான்று இருந்தால், வாங்குவோரிடம், ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படுவதில்லை.கேரள வெள்ளப் பாதிப்பு நிவாரணத்திற்காக, இரண்டு ஆண்டுகளுக்கு, 1 சதவீத இடர்ப்பாட்டு மேலாண்மை வரி விதிப்பது குறித்து, இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.


மேலும், சிறிய நிறுவனங்களுக்கு, ‘காம்போசிஷன்’ எனப்படும் கலப்பு வரி திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்த அறிவிப்பும் வெளியாக வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)