ஆயுள் காப்பீடு பிரிமியம் வசூலில் புதிய சாதனைஆயுள் காப்பீடு பிரிமியம் வசூலில் புதிய சாதனை ...  தொழில் அமைப்புகளுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு தொழில் அமைப்புகளுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு ...
நிதி பிரச்னைக்கு தீர்வு காண ‘ஜெட் ஏர்வேஸ்’ ஆலோசனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2019
23:16

புதுடில்லி : ‘நிதி நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது’ என, ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம், 2018 மார்ச் முதல், தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக, தலா, 1,000 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருகிறது. விமானிகள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஊதிய நிலுவை வைத்துள்ளது. இதையடுத்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனரும், அதன் தலைவருமான, நரேஷ் கோயல், தன் வசமுள்ள, 51 சதவீத பங்குகளில், 25 சதவீதத்தை, ‘எதியாட் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்திற்கு விற்க உள்ளதாக தகவல் வெளியானது.

அத்துடன், தலைவர் பொறுப்பில் இருந்தும் நரேஷ் கோயல் விலகுவார் என, கூறப்பட்டது. ஆனால், இது குறித்து, எதியாட் ஏர்லைன்ஸ் கருத்து எதுவும் கூறவில்லை. இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஜெட் ஏர்வேஸ் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைமையிலான வங்கி குழு, இதர கடன்தாரர்கள் மற்றும் பங்கு முதலீட்டாளர்கள் இடையே ஆலோசனை நடைபெற்று வருகிறது. நிறுவனத்தில், பிற நிறுவனங்கள் மூலம் மேற்கொண்டு பங்கு முதலீடு செய்வது, இயக்குனர் குழுவை மாற்றி அமைப்பது, சிக்கனத்தை கடைப்பிடித்து கடன்களை குறைப்பது, சொத்துக்களை விற்பனை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து, விவாதிக்கப்படுகிறது.

விரைவில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை புத்துயிரூட்டுவதற்கான தீர்வு திட்டம் உருவாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)