ஏலக்காய் கிலோ ரூ.1,900மீண்டும் விலை உயர்வு ஏலக்காய் கிலோ ரூ.1,900மீண்டும் விலை உயர்வு ...  ஜி.டி.பி., வளர்ச்சிக்கேற்ப கரன்சி தேவை அதிகரிக்கும் ஜி.டி.பி., வளர்ச்சிக்கேற்ப கரன்சி தேவை அதிகரிக்கும் ...
வங்கி வட்டியை குறைக்க தொழில் துறை கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2019
03:26

புதுடில்லி : வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என, தொழில் துறையினர், ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டில்லியில் நேற்று, ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸை, தொழில் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இது குறித்து, இந்திய தொழிலக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை, 50 சதவீதம் குறைத்தால், பணப்புழக்கம் பெருகும்.இத்துடன், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டியை, 0.50 சதவீதம் குறைத்தால், தொழில் துறைக்கு தாராளமாக கடன் வழங்க முடியும். இதனால், குறிப்பாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு துறை பயன் பெறும்.

சில்லரை பணவீக்கம் குறைந்துள்ளதால், இந்த நடவடிக்கைகளை, பிப்., 7ல், கூடும், ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழு அறிவிக்கலாம் என, கூட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறைகள் சந்தித்த நிதிச் சவால்களுக்கு தீர்வு காண, ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளுக்கு, தொழில் துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

கடனுக்கான பிணை விதிமுறைகளை தளர்த்தினால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையை மேலும் ஊக்கப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)