ஜி.டி.பி., வளர்ச்சிக்கேற்ப கரன்சி தேவை அதிகரிக்கும் ஜி.டி.பி., வளர்ச்சிக்கேற்ப கரன்சி தேவை அதிகரிக்கும் ...  மின் வாகன சார்ஜ் மையங்கள்  ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது ...
வாகன உதிரிபாகங்கள் துறை 15 சதவீத வளர்ச்சி பெறும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2019
03:29

புதுடில்லி : உள்நாட்டு வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு துறை, அடுத்த நிதியாண்டில், 15 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காணும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.

இது குறித்து, இக்ரா அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சந்தையில் வாகனங்களுக்கான தேவை சரிவை சந்தித்து வரும் நிலையிலும், வாகன உதிரிபாகங்கள் துறை, அடுத்த நிதியாண்டில், 15 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி பெறும்.கடந்த நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், இரு சக்கர வாகனங்கள், வர்த்தக வாகனங்கள், டிராக்டர்கள் ஆகியவை அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலை, உதிரிபாகங்கள் விற்பனைக்கு ஆதரவாக இருக்கும்.

ஒரிஜினல் உதிரிபாகங்களுக்கான சராசரி தேவையை பொறுத்தமட்டில், அடுத்த நிதியாண்டில், 10 முதல், 11 சதவீதம் அளவுக்கு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே, 2017- – 18ல் எதிர்பார்ப்பு, 9.5 சதவீதமாக இருந்தது.இந்த அதிகரிப்புக்கு காரணம், வர்த்தக வாகனங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டிருப்பது தான்.

ஏற்றுமதியை பொறுத்தவரை, நிலவி வரும் வர்த்தக மோதல் சூழல்கள், அதிகரிக்கும் எண்ணெய் விலை போன்றவை, அமெரிக்க ஏற்றுமதியை பாதிக்கக் கூடும்.உதிரிபாகங்களை பொறுத்தவரை, அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து பார்த்தால், அமெரிக்காவுக்கு தான் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)