மின் வாகன சார்ஜ் மையங்கள்  ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது ...  இந்திய அகர்பத்திக்கு விதித்த தடை நீக்கம் இந்திய அகர்பத்திக்கு விதித்த தடை நீக்கம் ...
ரூ.100 கோடி டிபாசிட் செய்ய 24 மணி நேர கெடு; போக்ஸ்வேகனுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2019
03:32

புதுடில்லி : சுற்றுச்சூழல் மாசு தொடர்பான வழக்கில், ஜெர்மனியைச் சேர்ந்த போக்ஸ்வேகன் நிறுவனம், இன்று மாலை, 5:00 மணிக்குள், 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், போக்ஸ்வேகன் நிறுவனம், அதன் வாகனங்களில், சுற்றுச்சூழல் மாசு குறைவாக இருப்பது போல சாப்ட்வேரில் தில்லுமுல்லு செய்தது அம்பலமானது. இதையடுத்து, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட சந்தைகளில், 1.10 கோடி கார்களில் சாப்ட்வேர் மோசடி நடந்ததை, போக்ஸ்வேகன் ஒப்புக் கொண்டது.

இந்நிலையில், போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் சில மாடல் கார்கள், ‘பாரத் ஸ்டேஜ் – 4’ விதிகளை மீறி, இரு மடங்கு அதிகமாக காற்று மாசு வெளியிடுவதாக, இந்திய வாகன ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.இடைக்கால இழப்பீடுஇதையடுத்து, 2015ல், மூன்று லட்சத்து, 23 ஆயிரத்து, 700 கார்களை, அந்நிறுவனம் திரும்பப் பெற்று, சரி செய்து கொடுத்தது.

இந்நிலையில், சுற்றுச்சூழல் மாசு விதிகளை மீறிய போக்ஸ்வேகன் கார்களுக்கு தடை கோரி, சலோனி அயிலாவாடி உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதில், போக்ஸ்வேகன், சுற்றுச்சூழல் பாதிப்பிற்காக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, இடைக்கால இழப்பீடாக, 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என, 2018, நவ., 16ல், உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு, நேற்று தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர், ஆதர்ஷ் குமார் கோயல் முன்னிலையில், மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, போக்ஸ்வேகன், 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய தவறியதற்கு கண்டனம் தெரிவித்த, தீர்ப்பாய தலைவர், வெள்ளி மாலை, 5:00 மணிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் எனக் கூறி, வழக்கை தள்ளி வைத்தார்.

இந்தியாவில் விற்பனை செய்த கார்களில், சாப்ட்வேர் தில்லுமுல்லு எதுவும் செய்யவில்லை. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். எனினும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, 100 கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்படும்.போக்ஸ்வேகன் செய்தி தொடர்பாளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)