தங்கம் விலை சரிவு; வெள்ளி  உயர்ந்தது தங்கம் விலை சரிவு; வெள்ளி உயர்ந்தது ...  கொம்பாரிபை, ‘ஆப்’ ‘ஐரெப்’ஐ கையகப்படுத்தியது கொம்பாரிபை, ‘ஆப்’ ‘ஐரெப்’ஐ கையகப்படுத்தியது ...
எம்.எஸ்.எம்.இ., துறையில் ஒற்றைச்சாளர முறையில் அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2019
06:59

எம்.எஸ்.எம்.இ., எனும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஒற்றைச்சாளர முறையில் அனுமதி பெற, 363 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 111 விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், சிறிய நிறுவனங்கள் முதல், பெரிய நிறுவனங்கள் வரை தொழில் துவங்க, ஒற்றைச்சாளர முறையில் இணையதளம் வழியாக அனுமதி பெறும், ‘தமிழ்நாடு வணிகம் எளிதாக்குதல் சட்டம்’ ஏப்ரலில் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதன் வழியாக, புதிய தொழில் நிறுவனம் துவங்குதல், ஏற்கனவே உள்ள நிறுவனத்தை விரிவுபடுத்துதல், தடையின்மை சான்றிதழ், அனுமதியை புதுப்பித்தல் போன்ற, தொழில் சார்ந்த அனைத்து வசதிகளையும் பெற முடியும்.இதில் விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு, 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், எம்.எஸ்.எம்.இ., துறையில், 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஒற்றைச்சாளர முறை அறிமுகப்படுத்திய ஒன்பது மாதங்களில், இதுவரை, 363 சிறு, குறு நிறுவனங்கள், தொழில் துவங்க விண்ணப்பித்துள்ளன.

இதில், 252 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இதன் வழியாக, 843 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுஉள்ளது. மேலும், 16 ஆயிரத்து, 918 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மீதம் உள்ள, 111 விண்ணப்பங்கள் செயல்பாட்டில் உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)