கொம்பாரிபை, ‘ஆப்’ ‘ஐரெப்’ஐ கையகப்படுத்தியது கொம்பாரிபை, ‘ஆப்’ ‘ஐரெப்’ஐ கையகப்படுத்தியது ...  ஜி.எஸ்.டி., குறைந்தால் வீடு விலை குறையுமா? : இறுதி முடிவு எடுப்பதில் கவுன்சில் திணறல் ஜி.எஸ்.டி., குறைந்தால் வீடு விலை குறையுமா? : இறுதி முடிவு எடுப்பதில் ... ...
விலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2019
07:03

புதுடில்லி : ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வெகுவாக குறைக்கப்பட்டு ஓராண்டு ஆன பிறகும், அதன் பலனை நுகர்வோருக்கு வழங்காமல், உணவுப் பண்டங்கள் விலையை குறைக்காமல், ஓட்டல்கள் ஏமாற்றுவது, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இது குறித்து, லோக்கல் சர்கிள்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: கடந்த, 2017, ஜூலை 1ல், ஜி.எஸ்.டி., அறிமுகமானது முதல், இந்தாண்டு, ஜன.,1 வரை, ஐந்து முறை வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி., கவுன்சில், 2017, நவம்பரில், உணவகங்களுக்கான வரியை, 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைத்தது. இது போன்ற, பல்வேறு பொருட்களுக்கு வரி குறைப்பால் கிடைத்த பயனை, நிறுவனங்கள், ஓட்டல்கள் ஆகியவை, நுகர்வோருக்கு வழங்க வேண்டும் எனவும், மத்திய அரசு அறிவுறுத்தியது.

நடவடிக்கை:
அதன்படி, பொருட்கள் விலையை குறைக்காத நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்க, தேசிய கொள்ளை லாப தடுப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், 2018, அக்டோபரில், ஜி.எஸ்.டி., குறைப்பால் பெற்ற பயன் குறித்து, நுகர்வோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதில், ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்ட பின்னும், ஓட்டல் நிர்வாகங்கள், உணவுப் பண்டங்கள் விலையை குறைக்கவில்லை என்பதால், தாங்கள் பயனடையவில்லை என, 45 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.

இது, இம்மாதம் மேற்கொண்ட ஆய்வில், 51 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த ஆய்வில், 29 சதவீதத்தினர் மட்டுமே, ஓரளவு பயன் பெற்றதாக தெரிவித்துள்ளனர். ஷாம்பூ, மளிகை உள்ளிட்ட நுகர்பொருட்கள் விலை குறையவில்லை என, 44 சதவீதம் பேர் கூறியுள்ளனர். எனினும், இது, கடந்த ஆண்டு, ஜூன், அக்டோபர் காலத்தை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதே காலத்தில், 'டிவி', பிரிஜ் உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்களில், வரி குறைப்பின் பயன் கிடைக்கவில்லை என, தெரிவித்தோர் சதவீதம், 47லிருந்து, 38ஆக குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புகார் அளிக்க வேண்டும்:
ஜி.எஸ்.டி., குறைப்பின் பயனை நுகர்வோருக்கு வழங்காத நிறுவனங்கள் குறித்து புகார் அளித்தால் மட்டுமே, தேசிய கொள்ளை லாப தடுப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என, நுகர்வோர் நல அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)