அப்படியா அப்படியா ... முட்டை விலை 415 காசாக நிர்ணயம் முட்டை விலை 415 காசாக நிர்ணயம் ...
இந்திய ஆடைகளுக்கு பிரத்யேக அளவு குறியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2019
23:26

காந்திநகர் : இந்திய ஆடைகளுக்கு பிரத்யேகமான ஆடை அளவுகள் உருவாக்கப்படும் என, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்று பேசினார். அப்போது, ‘‘அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகள், தங்களுக்கென பிரத்யேக ஆடை அளவுகளை வைத்திருப்பது போல, இந்தியாவுக்கும் தனியான அளவு குறியீடுகள் உருவாக்கப்படும்’’ என, தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: ஆடைகள் ஏற்றுமதி பிரிவைப் பொறுத்தவரை, மிகப் பெரிய சவாலாக, ஆடைகள் அளவு என்பது இருக்கிறது. ஐரோப்பிய நாடுகள், அவற்றுக்கு என, தனியான அளவுகளை வைத்துள்ளன. அதேபோல், அமெரிக்காவும் தனியான அளவு குறியீடுகளை வைத்துள்ளது. ஆனால் இந்தியாவுக்கு, இது போல பிரத்யேகமான ஆடை அளவு குறியீடுகள் இல்லை. 42, 44, எக்ஸ் எல் என, பலவிதங்களில் ஆடை அளவுகளை குறிப்பிடுகின்றனர்.

எனவே, இந்தியாவுக்கு என பிரத்யேகமான, ‘சைஸ் இந்தியா’ திட்டம் உருவாக்கப்பட்டு, விரைவில் அது நாடு முழுக்க அமல்படுத்தப்படும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இந்திய ஜவுளித் துறையின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக, கடந்த ஆண்டில் மட்டும், 1,800 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது.

இந்த ஒதுக்கீட்டை தொடர்ந்து, 30 ஆயிரம் கோடி ரூபாய் புதிய முதலீடுகள் ஜவுளி துறைக்கு வந்துள்ளன.ஜவுளித் துறையில் உள்நாட்டு தேவை குறித்து புள்ளிவிபரங்கள் எடுத்து, ஆராய்ச்சி செய்யப்படும். அதன் மூலம், இந்திய ஜவுளி துறையின் அடிப்படை வலுவாக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)