60 சதவீத தொழிலாளர்கள் ‘ஆப்சென்ட்’; திருப்பூர் நிறுவனங்கள் கவலை60 சதவீத தொழிலாளர்கள் ‘ஆப்சென்ட்’; திருப்பூர் நிறுவனங்கள் கவலை ...  வெளிநாட்டு நிறுவனங்களால் உள்நாட்டு வர்த்தகம் பாதிப்பு? வெளிநாட்டு நிறுவனங்களால் உள்நாட்டு வர்த்தகம் பாதிப்பு? ...
ஐ.டி.பி.ஐ., வங்கியை கையகப்படுத்தியது, எல்.ஐ.சி.,; 51 சதவீத பங்குகள், எல்.ஐ.சி., நிறுவனம் வசம் வந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2019
23:31

புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கியின், 51 சதவீத பங்குகளை, எல்.ஐ.சி., நிறுவனம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவேறிவிட்டதாக, ஐ.டி.பி.ஐ., வங்கி அறிவித்துள்ளது. இதையடுத்து, ஐ.டி.பி.ஐ., வங்கியின் பெரும்பான்மை பங்குதாரராக, எல்.ஐ.சி., உருவெடுத்து உள்ளது.

‘ஐ.டி.பி.ஐ., வங்கியின் பங்குகளை, எல்.ஐ.சி., வாங்குவது குறித்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவு செய்யப்பட்டது. இம்முடிவு இரு தரப்புக்கும் நன்மை தரும். பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் என, அனைத்து தரப்பினருக்கும் பலனளிக்க கூடியதாக அமையும்’ என, மும்பை பங்குச் சந்தைக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில், ஐ.டி.பி.ஐ., குறிப்பிட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய அமைச்சரவை குழு, ஐ.டி.பி.ஐ., வங்கியை, எல்.ஐ.சி., கையகப்படுத்துவதற்கு அனுமதி வழங்கியது.

இந்த கையகப்படுத்துதல் மூலம், எல்.ஐ.சி., நிறுவனம், வங்கித் துறையில் அடியெடுத்து வைக்கிறது.இந்த நடவடிக்கை, சிரம நிலையில் இருக்கும், ஐ.டி.பி.ஐ., வங்கிக்கும் நன்மை பயப்பதாக இருக்கும் என, கருதப்படுகிறது.நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், ஐ.டி.பி.ஐ., வங்கி, 3,602 கோடி ரூபாய் நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளது.மேலும், அதன் வாராக் கடனும்,31.78 சதவீதமாக அதிகரித்துள்ளது.ஐ.டி.பி.ஐ., வங்கிக்கு, 1.5 கோடி வாடிக்கையாளர்களும், 18 ஆயிரம் ஊழியர்களும் உள்ளனர்.

இந்த கையகப்படுத்துதல் மூலமாக, ஐ.டி.பி.ஐ., வங்கியின், 800 கிளைகளும், எல்.ஐ.சி., நிறுவனத்தின் காப்பீட்டு பாலிசி வணிகத்துக்கு உதவியாக இருக்கும் என, கருதப்படுகிறது.

உயரதிகாரிகள் மாற்றம் இல்லை:
ஐ.டி.பி.ஐ., வங்கியின், 51 சதவீத பங்குகளை, எல்.ஐ.சி., நிறுவனம் கையகப்படுத்தி உள்ள நிலையில், ஐ.டி.பி.ஐ. வங்கி, அதன் உயரதிகாரிகள் பொறுப்பில் எந்த மாற்றமும் இருக்காது என, அறிவித்து உள்ளது.குறிப்பாக, வங்கியின் நிர்வாக இயக்குனராக இருக்கும் ராகேஷ் ஷர்மா, உதவி நிர்வாக இயக்குனர்களான கே.பி.நாயர், ஜி.எம். யத்வாத்கர் ஆகியோர் அதே பதவியில் தொடருவர் என, தெரிவித்துள்ளது.

அதேசமயம், ராஜேஷ் கந்த்வால் கூடுதல் இயக்குனராகவும், ஐ.டி.பி.ஐ., வங்கியின் நிர்வாக குழுவில், எல்.ஐ.சி., சார்பான இயக்குனராகவும் நியமிக்கப்படுவதற்கும் வங்கி நிர்வாக குழு, அனுமதி வழங்கி உள்ளது.கந்த்வால், எல்.ஐ.சி.எச்.எப்.எல்., கேர் கோம்ஸ் நிறுவனத்தின் இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)