ஐ.டி.பி.ஐ., வங்கியை கையகப்படுத்தியது, எல்.ஐ.சி.,; 51 சதவீத பங்குகள், எல்.ஐ.சி., நிறுவனம் வசம் வந்தது ஐ.டி.பி.ஐ., வங்கியை கையகப்படுத்தியது, எல்.ஐ.சி.,; 51 சதவீத பங்குகள், எல்.ஐ.சி., ... ...  தொழில் புரட்சியில் இந்தியா முன்னணி; பிற நாடுகளைவிட அதிக துணிச்சலுடன் இருப்பதாக ஆய்வறிக்கை தொழில் புரட்சியில் இந்தியா முன்னணி; பிற நாடுகளைவிட அதிக துணிச்சலுடன் ... ...
வெளிநாட்டு நிறுவனங்களால் உள்நாட்டு வர்த்தகம் பாதிப்பு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2019
23:32

சென்னை : ‘‘இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு வர்த்தகத்தை பாதிக்கும் வகையில் செயல்படுவதால், இங்குள்ள தொழில் நிறுவனங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்,’’ என, மத்திய வர்த்தக தொழில் தீர்வு இயக்ககத்தின் கூடுதல் இயக்குனர், எம்.தாகூர் தெரிவித்தார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மத்திய வர்த்தக தொழில் தீர்வு இயக்ககம், அயல்நாட்டு வர்த்தக இயக்ககம் ஆகியவை இணைந்து, ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகர்களுடன், கலந்துரையாடல் நிகழ்ச்சியை, சென்னையில், நேற்று நடத்தின.

இதில், மத்திய வர்த்தக தொழில் தீர்வு இயக்குனரக, கூடுதல் இயக்குனர், எம்.தாகூர் பேசியதாவது: வர்த்தகத்திற்காக இந்தியாவுக்குள் வரும் வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய வர்த்தகத்தை பாதிக்கும் வகையில் செயல்படுகின்றன. இதனால், இங்குள்ள தொழில் நிறுவனங்கள், விழிப்புடன் செயல்பட வேண்டும். தங்கள் நிறுவனங்களைப் பாதுகாக்கும் வழிவகைகளை கண்டறிவது அவசியம்.

இதற்காக, வர்த்தக தீர்வுகளுக்கான இயக்ககத்தை, மத்திய அரசு உருவாக்கி உள்ளது. உலக பொருளாதார சூழலுக்கு ஏற்ப, பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான நிவாரணம், தாமதமின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மூன்று ஆண்டுகளில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 16 சதவீதமாக உள்ள உற்பத்தித் துறையின் பங்கை, மூன்று ஆண்டுகளில், 25 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், அயல்நாட்டு வர்த்தக இயக்குனரக, கூடுதல் இயக்குனர், டி.கே.சேகர் மற்றும் ஏராளமான வர்த்தகர்கள் பங்கேற்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)