வெளிநாட்டு நிறுவனங்களால் உள்நாட்டு வர்த்தகம் பாதிப்பு? வெளிநாட்டு நிறுவனங்களால் உள்நாட்டு வர்த்தகம் பாதிப்பு? ... பங்குச்சந்தைகள், ரூபாயின் மதிப்பு சரிவு பங்குச்சந்தைகள், ரூபாயின் மதிப்பு சரிவு ...
தொழில் புரட்சியில் இந்தியா முன்னணி; பிற நாடுகளைவிட அதிக துணிச்சலுடன் இருப்பதாக ஆய்வறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2019
23:35

டாவோஸ் : நான்காம் தொழிற்புரட்சியின் சவால்களை சந்திப்பதில், மற்ற நாடுகளை விட, இந்திய நிறுவனங்கள், சிறப்பான நிலையில் இருக்கின்றன என தெரிவித்துள்ளது, ‘டெலாய்ட்’ எனும் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை.

உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு மாநாடு, இம்முறை சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், 3,000 உலகத் தலைவர்கள் பங்கெடுத்துள்ளனர். இந்தியாவில் இருந்து, 100 தொழில்துறைத் தலைவர்கள் பங்கேற்றுஉள்ளனர். 19 நாடுகளைச் சேர்ந்த, 2,000 தலைமை அதிகாரிகளிடம் நடைபெற்ற ஆய்வு இது. இந்தியாவில் இருந்து, 130 பேர் அதில் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:இணையமும் இயந்திரமும் சேர்ந்து உருவாக்கும், ‘தொழிற்புரட்சி 4.0’ எனும், நான்காம் தொழிற்புரட்சி நடைபெற்றுவரும் இக்காலகட்டத்தில், உலகத் தொழிற்துறைத் தலைவர்கள் அனைவரும், தமது நாட்டின் தொழிலகங்களையும், பணியாளர்களையும் தயார்படுத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஆனால், இந்திய தொழிலகங்களோ, எதிர்காலத் தேவைகளை மனதில் கொண்டு, பணியாளர்களை முன்கூட்டியே தயார்படுத்தி வருகின்றன. தேவைகளில் இருந்து லாபத்தை ஈட்ட முடியும் என்பதை, இந்திய நிர்வாகத்துறையைச் சேர்ந்தவர்கள், நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.

தொழில்நுட்பங்களை நியாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற அறவுணர்வும், இவர்களிடம் அதிகமாக உள்ளது.சமூக ரீதியான தாக்கமே தமது வெற்றிக்கான அளவுகோல் என்று, உலக தொழில் தலைவர்களில், 34 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க, வாடிக்கையாளர் திருப்தியே முதன்மையான நோக்கம் என்று, 29 சதவீத இந்திய தொழில் தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவில், தமது நிறுவனம் சமூகத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் பொருளையோ, சேவையையோ உற்பத்தி செய்திருக்கிறது என்று, 85 சதவீத பேர் நம்புகின்றனர்.இதே போன்ற கருத்தைத் தெரிவிப்போரின் உலக சராசரி, 73 சதவீதம் தான்.தங்கள் நிறுவனத்தில் முடிவுகள் எடுப்பதற்குத் தெளிவான வழிமுறை இருப்பதாக, இந்தியத் தொழிலகத் தலைவர்களில், 58 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். உலக அளவில் இதுதான் மிகவும் அதிகம்.

தவறு செய்யவும் அதன்மூலம் பாடம் கற்கவும் வாய்ப்பு அளிக்கும் தலைமைகள், இந்தியாவில் இருப்பதாக, 65 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். உலக அளவில் இது, 69 சதவீதம்.உலக அளவில், 33 சதவீத நிறுவனங்களே சந்தையைத் தகர்க்கும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய முன்வரும் நிலையில், இந்திய நிறுவனங்களோ, 41 சதவீதம் முதலீடு செய்யத் தயாராக இருக்கின்றன. இவ்வாறு, டெலாய்ட் ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.

துணிச்சல்:
நான்காம் தொழிற்புரட்சிக்குத் தேவைப்படும் பணியாளர்களை உருவாக்குவதில், உலகத் தொழிலகத் தலைவர்கள் சந்திக்கும் அதே சவால்களைத் தான், இந்தியத் தலைவர்களும் சந்திக்கின்றனர். ஆனால், அதை சமாளிப்பதில் இந்திய தலைவர்கள் துணிச்சலுடன் இருக்கின்றனர்.
-டெலாய்ட் நிறுவனத்தின் ஆய்வறிக்கை

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)