பதிவு செய்த நாள்
22 ஜன2019
23:26
புதுடில்லி : ஸ்ரீ இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம், அதன், ஸ்ரீ எக்யுப்மென்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு திட்டத்தை கைவிட்டுள்ளது.
இந்நிறுவனம், 2017ல், புதிய பங்கு வெளியீடு மூலம், 1,800 கோடி ரூபாய் திரட்ட, ‘செபி’யிடம் விண்ணப்பித்தது. இதற்கு, நான்கு மாதங்களுக்கு முன், ஒப்புதல் கிடைத்தது.அச்சமயம், ஐ.எல்.அண்ட் எப்.எஸ்., குழும நிதி நெருக்கடி வெளிச்சத்திற்கு வந்தது. இதனால், அடிப்படை கட்டமைப்புத் துறை நிறுவனங்கள், முதலீட்டை திரட்டுவதில் சிரமத்தை சந்தித்துள்ளன.
இத்தகைய சூழலில், புதிய பங்கு வெளியீட்டை தவிர்க்க, ஸ்ரீ நிறுவனம் முடிவு செய்துள்ளது.அதே சமயம், ஸ்ரீ இன்ப்ரா நிறுவனத்தில் இருந்து, ஸ்ரீ எக்யுப்மென்ட் பிரிவை தனியே பிரித்து, ஸ்ரீ அசெட் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைத்து, பங்குச் சந்தையில் பட்டியலிட திட்டமிட்டு உள்ளது.
இதற்கான ஒப்புதலை, ஸ்ரீ நிறுவனத்தின் இயக்குனர் குழு வழங்கியுள்ளது. இந்த பிரிப்பு மற்றும் இணைப்பு நடவடிக்கை, ‘செபி’ யின் ஒப்புதலைப் பெற்று, நடைமுறைக்கு வர, ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு வரை ஆகும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|