ஸ்ரீ இன்ப்ரா நிறுவனம் பங்கு வெளியீட்டை கைவிட்டது ஸ்ரீ இன்ப்ரா நிறுவனம் பங்கு வெளியீட்டை கைவிட்டது ...  டொயோட்டா, பானாசோனிக் கூட்டாக பேட்டரி தயாரிப்பு டொயோட்டா, பானாசோனிக் கூட்டாக பேட்டரி தயாரிப்பு ...
புதுமைகளை வரவேற்க மாருதியின் புதிய திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2019
23:27

புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி, வாகனத் துறையில் புதுமைகளை மேம்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை, அறிமுகம் செய்துள்ளது.

’இந்த திட்டத்தின்படி, புதுமைகளையும், தீர்வுகளையும் வழங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை, மாருதி அடையாளம் காணும். இந்த முயற்சி, எதிர்காலத்திற்கும் வாடிக்கையாளர்களுக்கும் பலனளிக்க கூடியதாக இருக்கும்.‘இந்த திட்டத்தின் மூலம், தொழில்முனையும் ஆர்வமிக்கவர்கள், தங்கள் திறமைகளை, தேசிய அளவில் வெளிக்காட்டுவதற்கான மேடை அமைத்து தரப்படும்’ என, மாருதி தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான, கெனிச்சி அயுகவா கூறியுள்ளதாவது:இந்திய வாகன துறை, தொடர்ந்து வளர்ச்சியை கண்டு வருகிறது. நாட்டின் தற்போதைய தேவை, புதுமையை ஊக்குவிக்கும் ஒரு கலாசாரத்தை ஏற்படுத்துவது தான்.மாருதியின் இந்த திட்டமானது, புதுமைகளை உருவாக்கும் திறன் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இருக்கும்.

கார்கள், எலக்ட்ரிக் வாகனங்கள், உள்கட்டமைப்புகள் ஆகியவை குறித்தான தங்கள் ஐடியாக்களை, எங்களுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தெரிவிக்கலாம். அவற்றிலிருந்து சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தேர்வு செய்து, அவர்களின் ஐடியாக்களை நிறைவேற்றும் வகையில், மாருதியுடன் இணைந்து செயல்பட வாய்ப்பளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)