பதிவு செய்த நாள்
22 ஜன2019
23:41
புதுடில்லி: மத்திய அரசு, நிதியாண்டை, ஜனவரி – டிசம்பர் ஆக, மாற்றுவதுகுறித்து, மீண்டும் பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளையர் ஆட்சியில், 1867ல் துவங்கி தற்போது வரை, ஏப்ரல் – மார்ச் நிதியாண்டாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இதை, ஜனவரி – டிசம்பர் ஆக மாற்றுவது குறித்து, 2016ல் மத்திய அரசு பரிசீலித்தது. இது தொடர்பாக, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர், சங்கர் ஆச்சார்யா தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, நிதியாண்டு மாற்றத்தை வரவேற்காத சூழலில், பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., அறிமுகம் போன்றவற்றின் தாக்கத்தால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.தற்போது, மீண்டும் நிதியாண்டை மாற்றுவது குறித்து, மத்திய அரசு பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, மத்திய பட்ஜெட், வழக்கத்தை விட முன்னதாகவே, பிப்., 1ல் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியாண்டை மாற்றினால், குறிப்பாக, தென்மேற்கு பருவழை விபரம், வேளாண் சாகுபடி நிலவரம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், மத்திய பட்ஜெட் தயாரிப்பது சுலபமாகும் என, மத்திய அரசு கருதுகிறது. இதையொட்டியே, நிதியாண்டை மாற்றுவது குறித்து, மீண்டும் பரிசீலனை செய்வதாக கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|