பதிவு செய்த நாள்
23 ஜன2019
11:46
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் மூன்றாம் நாளில் மந்தமான சூழல் நிலவுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில்(ஜன., 23, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 13.51 புள்ளிகள் சரிந்து 36,431.13-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 8 புள்ளிகள் சரிந்து 10,914.60-ஆக வர்த்தகமானது.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் சுணக்கமான சூழலால் இந்திய பங்குச்சந்தைகளும் மந்தமாக உள்ளன. காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 1.57 புள்ளிகள் உயர்ந்து 36,446.21ஆகவும், நிப்டி 2.85 புள்ளிகள் உயர்ந்து 10,925.60ஆகவும் வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பு உயர்வு
பங்குச்சந்தைகள் மந்தமாக இருந்தபோதும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் உயர்ந்து ரூ.71.15ஆக வர்த்தகமானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|