பதிவு செய்த நாள்
23 ஜன2019
23:25
சேலம் : வட மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு விற்பனைக்கு வரும், புதிய வெள்ளைப் பூண்டின் விலை உயர்ந்துள்ளது.
தமிழகத்துக்கு தேவையான வெள்ளைப் பூண்டு, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், பீஹார் மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது. கடந்த ஆண்டு அவற்றின் விளைச்சல், பல மடங்கு அதிகரித்ததால், விலை வீழ்ச்சி ஏற்பட்டது.
தற்போதைய நிலையில், பழைய வெள்ளைப் பூண்டு, முதல் தரம் கிலோ, 50 ரூபாய்; இரண்டாம் தரம், 40 ரூபாய்; மூன்றாம் தரம், 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வட மாநிலங்களில் பூண்டு அறுவடை துவங்கிய நிலையில், ஜனவரி இரண்டாவது வாரம் முதல், தமிழகத்துக்கு புதிய வெள்ளைப் பூண்டு விற்பனைக்கு வரத்துவங்கி உள்ளது.
முதல் தரம், 80 ரூபாய்; இரண்டாம் தரம், 75 ரூபாய்; மூன்றாம் தரம், 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில், புதிய வெள்ளைப் பூண்டு, கிலோ, 40 – 60 ரூபாய் வரை விற்பனையானது.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:பழைய வெள்ளைப் பூண்டு காய்ந்த நிலையில் இருக்கும்; குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், புதிய பூண்டுகளில், அதிக ஈரத்தன்மை உள்ளதால், அவற்றை வாங்கி இருப்பு வைத்து விற்கும் போது, எடை குறைந்து இழப்பு ஏற்படும்.இதனால், புதிய பூண்டை வாங்க, சில்லரை, மளிகை வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். புதிய பூண்டு விலை, இன்னும் சில தினங்களில் குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|