பதிவு செய்த நாள்
23 ஜன2019
23:28
புதுடில்லி : 'மத்திய பட்ஜெட்டில், வியாபாரிகளுக்கு விபத்து காப்பீடு, குறைந்த வட்டியில் கடன் உள்ளிட்ட சலுகைகளை அறிவிக்க வேண்டும்' என, இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, இக்கூட்டமைப்பு, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம்: ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்த வர்த்தகர்களுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு விபத்து காப்பீடு வழங்க வேண்டும். வியாபாரிகள், மின்னணு வர்த்தகத்திற்கு மாறி வருகின்றனர். அதனால், கணினி மற்றும் துணை சாதனங்களை வாங்க, மானியம் வழங்க வேண்டும். சில்லரை விற்பனை மற்றும் மின்னணு வர்த்தகத்திற்கு தேசிய கொள்கையை உருவாக்கி, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும்.
தற்போது, சிறிய வியாபாரிகளில், 5 சதவீதம் பேர் தான், வங்கி கடன் பெறுகின்றனர். மீதம் உள்ளோர், தனியார், உறவினர் உள்ளிட்டோரிடம் கடன் வாங்குகின்றனர். அதனால், வங்கிகள், வியாபாரிகளுக்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி.,யில், 18 சதவீத பிரிவை நீக்க வேண்டும். இக்கோரிக்கைகளை, பட்ஜெட்டிற்கு முன்பாகவோ அல்லது பட்ஜெட் உரையிலோ அறிவிக்க கோருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|