பதிவு செய்த நாள்
30 ஜன2019
23:42
திருப்பூர் : தரம் குறைந்த பஞ்சு வருகையால், உற்பத்தி செலவினம் அதிகரித்து, தமிழக நுாற்பாலை துறையினரை கவலை அடையச் செய்துள்ளது.
தமிழக நுாற்பாலைகள், குஜராத், தெலுங்கானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் பருத்தி பஞ்சு கொள்முதல் செய்து, நுால் உற்பத்தி செய்கின்றன. உள்நாட்டு ஆடை உற்பத்தி துறைக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் நுால் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இரு வகையான வர்த்தகத்திலும், நுாலின் தரம் மிக முக்கியமானதாக உள்ளது.சீசன் துவங்கிய அக்., முதல், டிச., வரை, நுாற்பாலைகளுக்கு தரமான பஞ்சு கிடைத்தது.
தற்போது, வெளிமாநிலங்களில் இருந்து வரும் பஞ்சின் தரம், மிக மோசமானதாக உள்ளது. கொள்முதல் செய்யும் பஞ்சில் பெரும்பகுதியை கழிவாக நீக்கினால் மட்டுமே, தரமான நுால் தயாரிக்க முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது. இதனால், நுாற்பாலைகளின் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டுள்ளதோடு, செலவினமும் அதிகரித்துள்ளது.
‘இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன்’ கன்வீனர், பிரபு தாமோதரன் கூறியதாவது: தற்போது கிடைக்கும் பஞ்சின் தரம், மிகக் குறைவாக உள்ளது. பஞ்சு, தரம் குறைந்ததாக இருந்தாலும், தரமான நுால் தயாரிப்பது கட்டாயமாகிறது. இதனால், நுாற்பாலைகளுக்கு, கிலோவுக்கு, 6 ரூபாய் வரை, உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான நுால் ஏற்றுமதிக்கு அதிகளவு, ‘ஆர்டர்’ கிடைத்து வருகிறது.
வர்த்தக வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், பஞ்சு தரம் குறைந்திருப்பது, நுாற்பாலை துறையினரை கவலை அடையச் செய்கிறது. உற்பத்தி செலவு அதிகரிப்பால், நுால் விலையை உயர்த்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
---
மல்லிகை விலை குறைவு
ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மல்லிகை பூக்கள் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகளும், கிலோ, 200 ரூபாயாக குறைந்ததால் ொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்டிப்பட்டியை சுற்றியுள்ள பல கிராமங்களில், மல்லிகை பூக்கள் சாகுபடி நடைபெறுகிறது. சில மாதங்களாக நிலவிய தட்பவெப்பம், மல்லிகை செடிகளுக்கு சாதகமாக இல்லை. சாரல் மழை, அடுத்து நிலவிய கடும் பனியால் பூக்கள் சிறுத்தும், கருகியும் போனதால் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பனியின் தாக்கம் குறைந்து, பகலில் வெயில் அதிகரித்துள்ளது. இதனால், மல்லிகை செடிகளில் அதிக பூக்கள் பூத்துள்ளன. மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்து, விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|