அப்படியா அப்படியா ...  சந்தா கோச்சார் விதிகளை மீறி கடன் கொடுத்தார்; ஸ்ரீ கிருஷ்ணா குழு, ‘பகீர்’ அறிக்கை தாக்கல் சந்தா கோச்சார் விதிகளை மீறி கடன் கொடுத்தார்; ஸ்ரீ கிருஷ்ணா குழு, ‘பகீர்’ ... ...
தரமற்ற பஞ்சு வரத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2019
23:42

திருப்பூர் : தரம் குறைந்த பஞ்சு வருகையால், உற்பத்தி செலவினம் அதிகரித்து, தமிழக நுாற்பாலை துறையினரை கவலை அடையச் செய்துள்ளது.

தமிழக நுாற்பாலைகள், குஜராத், தெலுங்கானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் பருத்தி பஞ்சு கொள்முதல் செய்து, நுால் உற்பத்தி செய்கின்றன. உள்நாட்டு ஆடை உற்பத்தி துறைக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் நுால் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இரு வகையான வர்த்தகத்திலும், நுாலின் தரம் மிக முக்கியமானதாக உள்ளது.சீசன் துவங்கிய அக்., முதல், டிச., வரை, நுாற்பாலைகளுக்கு தரமான பஞ்சு கிடைத்தது.

தற்போது, வெளிமாநிலங்களில் இருந்து வரும் பஞ்சின் தரம், மிக மோசமானதாக உள்ளது. கொள்முதல் செய்யும் பஞ்சில் பெரும்பகுதியை கழிவாக நீக்கினால் மட்டுமே, தரமான நுால் தயாரிக்க முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது. இதனால், நுாற்பாலைகளின் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டுள்ளதோடு, செலவினமும் அதிகரித்துள்ளது.

‘இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன்’ கன்வீனர், பிரபு தாமோதரன் கூறியதாவது: தற்போது கிடைக்கும் பஞ்சின் தரம், மிகக் குறைவாக உள்ளது. பஞ்சு, தரம் குறைந்ததாக இருந்தாலும், தரமான நுால் தயாரிப்பது கட்டாயமாகிறது. இதனால், நுாற்பாலைகளுக்கு, கிலோவுக்கு, 6 ரூபாய் வரை, உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான நுால் ஏற்றுமதிக்கு அதிகளவு, ‘ஆர்டர்’ கிடைத்து வருகிறது.

வர்த்தக வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், பஞ்சு தரம் குறைந்திருப்பது, நுாற்பாலை துறையினரை கவலை அடையச் செய்கிறது. உற்பத்தி செலவு அதிகரிப்பால், நுால் விலையை உயர்த்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

---

மல்லிகை விலை குறைவு

ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மல்லிகை பூக்கள் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகளும், கிலோ, 200 ரூபாயாக குறைந்ததால் ொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆண்டிப்பட்டியை சுற்றியுள்ள பல கிராமங்களில், மல்லிகை பூக்கள் சாகுபடி நடைபெறுகிறது. சில மாதங்களாக நிலவிய தட்பவெப்பம், மல்லிகை செடிகளுக்கு சாதகமாக இல்லை. சாரல் மழை, அடுத்து நிலவிய கடும் பனியால் பூக்கள் சிறுத்தும், கருகியும் போனதால் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பனியின் தாக்கம் குறைந்து, பகலில் வெயில் அதிகரித்துள்ளது. இதனால், மல்லிகை செடிகளில் அதிக பூக்கள் பூத்துள்ளன. மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்து, விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)