பதிவு செய்த நாள்
30 ஜன2019
23:46
மும்பை : ‘ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி, சந்தா கோச்சார், வங்கி விதிமுறைகளை மீறி, வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கினார்’ என, ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான குழு. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு நேற்று அறிக்கை அளித்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி, சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்திற்கு, விதிகளை மீறி, 3,600 கோடி ரூபாய் கடன் வழங்கி, தன் கணவர் தீபக் கோச்சார் நிறுவனத்திற்கு ஆதாயம் பெற்றுத் தந்ததாக, 2018, மே மாதம் குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விவகாரம் குறித்து, சி.பி.ஐ., செபி, வருமான வரி துறை ஆகிய அமைப்புகள், விசாரணை நடத்தி வருகின்றன.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நிர்வாகம், முன்னாள் நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தலைமையில், 2018, மே, 30ல், தனி விசாரணக்கு உத்தரவிட்டது. ‘விசாரணை குழு, அறிக்கையை நவம்பரில் அளிக்கும்’ என, வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், கடந்த வாரம், வீடியோகான் நிறுவனத்திற்கு, வங்கி விதிகளை மீறி, பல ஆயிரம் கோடி கடன் வழங்கியதாக, சந்தாகோச்சார், தீபக்கோச்சார், வீடியோகான் தலைவர் வேணுகோபால் துாத் ஆகியோர் மீது, சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தது.
அடுத்த நடவடிக்கை:
இந்நிலையில், நேற்று மும்பையில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இயக்குனர் குழு கூட்டம் நடைபெற்றது.அதில், ஸ்ரீகிருஷ்ணா குழுவின் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சந்தா கோச்சார், வங்கி விதிமுறைகளை மீறி, வீடியோகான் நிறுவனத்திற்கு, கடன் வழங்க ஒப்புதல் அளித்தார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சந்தாகோச்சாரின் ராஜினாமாவை, பதவி நீக்கமாக மாற்ற, இயக்குனர் குழு முடிவு செய்துள்ளது.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, அறிக்கை விபரங்கள் அடிப்படையில், ரிசர்வ் வங்கி, செபி ஆகியவை அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது. வரும் நாட்களில், இது தொடர்பான பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது என, வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|