சந்தா கோச்சார் விதிகளை மீறி கடன் கொடுத்தார்; ஸ்ரீ கிருஷ்ணா குழு, ‘பகீர்’ அறிக்கை தாக்கல் சந்தா கோச்சார் விதிகளை மீறி கடன் கொடுத்தார்; ஸ்ரீ கிருஷ்ணா குழு, ‘பகீர்’ ... ...  புதிய அமைப்பின் கீழ் உள்நாட்டு வர்த்தகம் புதிய அமைப்பின் கீழ் உள்நாட்டு வர்த்தகம் ...
திவால் வழக்கு: மேலும் ரூ.67,000 கோடி கிடைக்கும்; ‘இக்ரா’ தர நிர்ணய நிறுவனம் மதிப்பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2019
23:51

மும்பை : ‘திவால் வழக்குகளை குறித்த காலத்தில் முடித்தால், மேலும், 67 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வசூலாகும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.

கடந்த, 2016, மே மாதம், நிறுவன திவால் சட்டம் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின் கீழ், வாராக் கடன் தொடர்பாக, 3,000த்திற்கும் அதிகமான நிறுவனங்கள் மீது, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் மீதான திவால் நடவடிக்கையை, அதிகபட்சம், 270 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என, சட்டம் கூறுகிறது.

ஆனால், பெரும்பாலான வழக்குகள், வரம்பு காலம் கடந்தும் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளன. இதற்கு, திவால் நடவடிக்கைக்கு எதிராக, கடன் பெற்ற நிறுவனங்கள் தொடுத்துள்ள வழக்குகளும் ஒரு காரணம்.

தீர்வு:
இந்நிலையில், வாராக் கடன் வசூல் தொடர்பாக, இக்ரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில், 2018, டிசம்பர் நிலவரப்படி, 898 வழக்குகளில், 586 வழக்குகள் சமரச தீர்வு மூலம் முடித்து வைக்கப்பட்டுள்ளன.அவற்றில், 79 வழக்குகள் மூலம், 65 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. 309 நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கை துவங்கி உள்ளது.

பெரும்பாலான வழக்குகளில், சராசரியாக, 354 நாட்களில் தீர்வு காணப்பட்டுள்ளது. இது, நிர்ணயித்த காலத்தை விட அதிகமாகும். ரிசர்வ் வங்கி, முதன் முதலாக, 2017ல், ‘பூஷன் பவர் அண்டு ஸ்டீல், எஸ்ஸார் ஸ்டீல் இந்தியா’ உள்ளிட்ட, 12 நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தது.

இதில், பெரும்பான்மை வழக்குகள், சராசரியாக, 500 நாட்கள் கடந்த பின்னும் தீர்வு காணப்படாமல் உள்ளன. வாராக் கடன் தீர்வுகளில் ஏற்படும் தாமதம், திவால் சட்டத்தின் நோக்கத்தை பாதிக்கும். அதிக தாமதம் காரணமாக, வாராக் கடனை ஒட்டுமொத்தமாக விற்கும் நிலைக்கு, கடன் கொடுத்த வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை ஆளாக நேரிடும்.

தள்ளுபடி:
திவால் வழக்குகளில், விரைந்து தீர்வு காணும் நோக்கில், கடன் கொடுத்த நிறுவனங்கள், சராசரியாக, 52 சதவீத கடனை தள்ளுபடி செய்துள்ளன.சில வழக்குகளில், தள்ளுபடி அளிக்காமல், மொத்த கடனும் வசூலிக்கப்பட்டுள்ளது.திவால் வழக்குகளில், குறித்த காலத்திற்குள் தீர்வு காணப்பட்டால், அடுத்த சில காலாண்டுகளில், மேலும், 67 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த, 2018 ஆகஸ்டில், திவால் சட்டத்தில், பிரிவு, 12ஏ சேர்க்கப்பட்டது. இதன்படி, ஒரு நிறுவனம், கடனுக்கான தீர்வு திட்டத்தை ஏற்றுக் கொண்டால், அதன் மீதான திவால் நடவடிக்கையை திரும்பப் பெறலாம். எனினும், தீர்வு திட்டத்திற்கு, கடன் மீட்புக் குழு உறுப்பினர்களில், 90 சதவீதம் பேர் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்த சட்ட திருத்தம், வாராக் கடனை விரைந்து முடிக்க துணை புரிவதாக உள்ளது.

-‘இக்ரா’ஆய்வறிக்கை

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)