புதிய அமைப்பின் கீழ் உள்நாட்டு வர்த்தகம் புதிய அமைப்பின் கீழ் உள்நாட்டு வர்த்தகம் ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 70.86 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 70.86 ...
‘பிராட்பேண்ட்’ பயன்படுத்துவோர் ஓர் ஆண்டில் 16 கோடி உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2019
23:55

இந்தியாவில், ஒயர் இல்லாத, ‘பிராட்பேண்ட்’ சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, ஓர் ஆண்டில், 16 கோடி உயர்ந்துள்ளது என, ‘டிராய்’ எனும் தொலை தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதே போன்று, மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, ஒரு கோடி உயர்ந்துள்ளது; ‘லேண்ட்லைன்’ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 14 லட்சம் குறைந்துள்ளது.

நகர்புறம்:
இந்தியாவில், மொபைல் போன், லேண்ட்லைன் போன், பிராட்பேண்ட் வசதி ஆகியவற்றை பயன்படுத்துவோரின் விபரங்களை, டிராய் சமீபத்தில் வெளியிட்டது.

இதன் விபரங்கள்: இந்தியாவில், 2018, நவம்பரின் படி, மொபைல் போன், 117.17 கோடி; லேண்ட்லைன் போன், 2.19 கோடி என, மொத்தம், 119.36 கோடி பேர், தொலை தொடர்பு வசதியை பயன்படுத்துகின்றனர்.இந்த எண்ணிக்கை, 2017, நவம்பரின் படி, மொபைல் போன், 116.24 கோடி; லேண்ட்லைன், 2.34 கோடி என, மொத்தம், 118.58 கோடியாக இருந்தது.

கடந்த ஓர் ஆண்டில் மட்டும், மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, ஒரு கோடியாக உயர்ந்துள்ளது. லேண்ட்லைன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 20 லட்சமாக குறைந்துள்ளது.இவற்றில், நகர்ப்புற மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 2018, நவ.,ல், 64.57 கோடியாக உள்ளது. இது, 2017, நவ.,ல், 66.49 கோடியாக இருந்தது.

லேண்ட்லைன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 2018ல், 1.88 கோடியாகவும், 2017ல், 1.99 கோடியாகவும் இருந்தது. இதில், மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இரண்டு கோடியும், லேண்ட்லைன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 11 லட்சமும் குறைந்துள்ளது.

இதே போன்று, கிராம பகுதிகளில் மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 2018, நவ.,ல், 52.60 கோடியாகவும், 2017, நவ.,ல், 49.75 கோடியாக இருந்தது.

குறைவு:
லேண்ட்லைன் எண்ணிக்கை, 2018ன் படி, 31 லட்சமாகவும், 2017ல், 34 லட்சமாகவும் இருந்தது. இதன் படி, மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, மூன்று கோடி உயர்ந்துள்ளது. லேண்ட்லைன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, மூன்று லட்சம் குறைந்துள்ளது.பிராட்பேண்ட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 2018ன் படி, 51.19 கோடியாக உள்ளது. இது, 2017ன் படி, 35.07 கோடியாகும்.

இதில், ஒயர்லஸ் பிராட்பேண்ட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 16 கோடி உயர்ந்துள்ளது. ஒயர் பிராட்பேண்ட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 10 லட்சம் குறைந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)