பதிவு செய்த நாள்
04 பிப்2019
23:38
திருப்பூர்:ஈரோடு மண்டிகளில், 10 லட்சம் மூட்டை மஞ்சள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், முதல்வரிடம் முறையிட உள்ளதாகவும், விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம், செயலர் சந்திரசேகர், துணை தலைவர் சண்முகசுந்தரம், திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடம் மற்றும் தனியார் மண்டிகளில், 10 ஆண்டுகளாக, 10 லட்சம் மூட்டை மஞ்சள், இருப்பு வைக்கப்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் கர்நாடக மாநில விவசாயிகள், ஒரு லட்சம் பேர், உற்பத்தி மஞ்சளை இருப்பு வைத்துள்ளனர்.
பொதுவாக, மஞ்சளை ஓராண்டு காலத்துக்குள் பயன்படுத்த வேண்டும். ஆனால், 10 ஆண்டுகளுக்கு மேல் இருப்பு வைத்துள்ள மஞ்சளுக்கு, அதிக வீரியம் கொண்ட மருந்து தெளித்து பாதுகாக்கப்படுகிறது. இவை, மஞ்சளின் தன்மையை, மருந்து கெடுத்து விடும் அபாயம் உள்ளது.மஞ்சளுக்கு அதிக விலை கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, தனியார் லாபம் பார்க்கின்றனர்.
விற்பனை கூடத்துக்கு எடுத்துச் சென்ற மூட்டைகளை, திரும்பவும் எடுக்க முடியாமல், தங்கள் உற்பத்தியை விற்பனை செய்யவும் முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். விரைவில், முதல்வரிடம் முறையிட உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|