பதிவு செய்த நாள்
05 பிப்2019
00:07
புதுடில்லி:நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டின், ஏப்., – செப்., வரையிலான ஆறு மாதங்களில், அன்னிய நேரடி முதலீடு, 11 சதவீதம் குறைந்து, 2,266 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இது, ரூபாய் மதிப்பில், 1.58 லட்சம் கோடியாகும்.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 1.77 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. மதிப்பீட்டு காலத்தில், அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில், சேவைகள் துறை, 491 கோடி டாலருடன் முதலிடத்தை பிடித்துள்ளது.அடுத்து, கணினி சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர், தொலைதொடர்பு, வர்த்தகம் ஆகியவை முறையே, 254 கோடி டாலர், 217 கோடி டாலர் மற்றும் 214 கோடி டாலர் முதலீட்டை திரட்டிஉள்ளன.
ரசாயனம் மற்றும் வாகன துறை, முறையே, 160 கோடி டாலர் மற்றும் 159 கோடி டாலர் ஈட்டிஉள்ளன.அன்னிய நேரடி முதலீடுகளை மேற்கொண்டதில், சிங்கப்பூர், 862 கோடி டாலருடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடங்களில், மொரீஷியஸ், நெதர்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் உள்ளன.
கடந்த நிதியாண்டில், அன்னிய நேரடி முதலீடு, ஐந்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவாக, 3 சதவீத வளர்ச்சியுடன், 4,485 கோடி ரூபாயாக இருந்தது.அன்னிய நேரடி முதலீடு குறைந்தால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும். அன்னியச் செலாவணிக்கு நிகரான ரூபாய் மதிப்பும் குறையும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|