பதிவு செய்த நாள்
05 பிப்2019
10:56
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கிய போதும் சற்றுநேரத்தில் ஏற்றம் கண்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 42 புள்ளிகள் சரிந்து 36,536.93-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 16.45 புள்ளிகள் சரிந்து 10,895.80-ஆகவும் வர்த்தகமான நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுகூட்டம் நடப்பதால் அதன்மீதான எதிர்பார்ப்பு காரணமாக பங்குச்சந்தைகள் உயர்ந்தன. காலை 10.50 மணியளவில் சென்செக்ஸ் 35 புள்ளிகள் உயர்ந்து 36,618-ஆகவும், நிப்டி 12 புள்ளிகள் உயர்ந்து 10,924ஆகவும் வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பு உயர்வு
இன்றைய வர்த்தகத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ.71.67ஆக வர்த்தகமானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|