தமிழக அரசுக்கு பங்குத்தொகை அளிப்பு தமிழக அரசுக்கு பங்குத்தொகை அளிப்பு ...  ரூ.900 கோடி மெய்நிகர் நாணயம் தொழிலதிபர் மறைவால் முடக்கம் ரூ.900 கோடி மெய்நிகர் நாணயம் தொழிலதிபர் மறைவால் முடக்கம் ...
தொடர்ந்து மந்தநிலையில் சேவைகள் துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2019
23:29

புதுடில்லி:நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, தொடர்ந்து இரண்டாவது மாதமாக, ஜனவரியில், குறைந்துள்ளது.அதேசமயம், வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக, நிக்கி – மார்கிட் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதில் கூறப்பட்டுள்ளதாவது:


ஜனவரியில், சேவைகள் துறையின் வளர்ச்சி, மந்தமாக இருந்தது. அதனால், இத்துறையின் வளர்ச்சியை குறிக்கும், நிக்கி – ஐ.எச்.எஸ்., மார்க்கிட், எஸ்.பி.எம்.ஐ., குறியீடு, 52.2 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது, 2018, டிசம்பரில், 53.7 புள்ளிகளாக இருந்தது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தால், அது வளர்ச்சியை குறிக்கும்.


இதன்படி, சேவைகள் துறை, தொடர்ந்து, எட்டு மாதங்களாக மிதமான வளர்ச்சியை கண்டு வருகிறது.உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, புதிய ஆர்டர்கள் வரத்து குறைந்துள்ளது. விற்பனை வளர்ச்சியும் மிதமான அளவிற்கே இருந்தது. இத்தகைய காரணங்களால், சேவைகள் துறை வளர்ச்சி, நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு, ஜனவரியில் மந்தமடைந்துள்ளது.


அதேசமயம், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில், சேவைகள் துறை வளர்ச்சி நன்கு உள்ளது. ஜனவரியில், முந்தைய மூன்று மாதங்கள் காணாத வகையில், வேலைவாய்ப்பு, அதிகரித்துள்ளது.தயாரிப்புமதிப்பீட்டு மாதத்தில், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை குறிக்கும், என்.ஐ.சி., – பி.எம்.ஐ.ஓ., குறியீடு, 53.6 புள்ளிகளாக, மாற்றமின்றி இருந்தது. இது, 2018, நவம்பரில், இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 54.5 புள்ளிகளாக உயர்ந்து காணப்பட்டது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


சேவைகள் துறை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, நடப்பு நிதியாண்டின், நான்காவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேசமயம், தனியார் நிறுவனங்கள், அதிக அளவில் பணியாளர்களை நியமிப்பதில் ஆர்வம் காட்டுவதால், வேலையில்லா திண்டாட்டம் குறையும்.

பாலியனா டி லிமா,

பொருளாதார வல்லுனர், ஐ.எஸ்.எஸ்., மார்கிட்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)