பதிவு செய்த நாள்
05 பிப்2019
23:29
புதுடில்லி:நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, தொடர்ந்து இரண்டாவது மாதமாக, ஜனவரியில், குறைந்துள்ளது.அதேசமயம், வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக, நிக்கி – மார்கிட் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜனவரியில், சேவைகள் துறையின் வளர்ச்சி, மந்தமாக இருந்தது. அதனால், இத்துறையின் வளர்ச்சியை குறிக்கும், நிக்கி – ஐ.எச்.எஸ்., மார்க்கிட், எஸ்.பி.எம்.ஐ., குறியீடு, 52.2 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது, 2018, டிசம்பரில், 53.7 புள்ளிகளாக இருந்தது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தால், அது வளர்ச்சியை குறிக்கும்.
இதன்படி, சேவைகள் துறை, தொடர்ந்து, எட்டு மாதங்களாக மிதமான வளர்ச்சியை கண்டு வருகிறது.உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, புதிய ஆர்டர்கள் வரத்து குறைந்துள்ளது. விற்பனை வளர்ச்சியும் மிதமான அளவிற்கே இருந்தது. இத்தகைய காரணங்களால், சேவைகள் துறை வளர்ச்சி, நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு, ஜனவரியில் மந்தமடைந்துள்ளது.
அதேசமயம், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில், சேவைகள் துறை வளர்ச்சி நன்கு உள்ளது. ஜனவரியில், முந்தைய மூன்று மாதங்கள் காணாத வகையில், வேலைவாய்ப்பு, அதிகரித்துள்ளது.தயாரிப்புமதிப்பீட்டு மாதத்தில், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை குறிக்கும், என்.ஐ.சி., – பி.எம்.ஐ.ஓ., குறியீடு, 53.6 புள்ளிகளாக, மாற்றமின்றி இருந்தது. இது, 2018, நவம்பரில், இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 54.5 புள்ளிகளாக உயர்ந்து காணப்பட்டது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
சேவைகள் துறை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, நடப்பு நிதியாண்டின், நான்காவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேசமயம், தனியார் நிறுவனங்கள், அதிக அளவில் பணியாளர்களை நியமிப்பதில் ஆர்வம் காட்டுவதால், வேலையில்லா திண்டாட்டம் குறையும்.
பாலியனா டி லிமா,
பொருளாதார வல்லுனர், ஐ.எஸ்.எஸ்., மார்கிட்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|