தொடர்ந்து மந்தநிலையில் சேவைகள் துறை தொடர்ந்து மந்தநிலையில் சேவைகள் துறை ...  பங்கு வெளியீட்டில் இரு நிறுவனங்கள் பங்கு வெளியீட்டில் இரு நிறுவனங்கள் ...
ரூ.900 கோடி மெய்நிகர் நாணயம் தொழிலதிபர் மறைவால் முடக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2019
23:31

புதுடில்லி:கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரின் திடீர் மறைவால், அவர் நிறுவன வாடிக்கையாளர்கள், 900 கோடி ரூபாய் மதிப்புள்ள மெய்நிகர் நாணயங்களை மீட்க வழியின்றி தவிக்கின்றனர்.


ஜெரால்டு காட்டன், 30, ‘குவாட்ரிகா சி.எக்ஸ்‘ என்ற நிறுவனம் மூலம், ‘பிட்காய்ன், லைட்காய்ன்’ உள்ளிட்ட மெய்நிகர் கரன்சி வர்த்தகத்தை நடத்தி வந்தார்.இந்நிலையில், 2018, டிசம்பரில், இந்தியாவில், ஒரு அனாதை இல்லச் சேவைக்காக வந்த ஜெரால்டு காட்டன், குடல்நோய் காரணமாக திடீரென்று மரணமடைந்தார்.


அவர் நிறுவனத்தின், 3.63 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு, 1,250 கோடி ரூபாய் மதிப்பிற்கு மெய்நிகர் நாணயங்களை தர வேண்டி இருந்தது.அதில், 1.15 லட்சம் பேருக்கு தர வேண்டிய, 900 கோடி ரூபாய் மதிப்புள்ள மெய்நிகர் நாணயங்களை, தன் பிரத்யேக கணினியில், ‘மின்னணு பணப் பை’யில் சேமித்திருந்தார்.அதை திறப்பதற்கான ‘பாஸ்வேர்டு‘ விபரம், ஜெரால்டு காட்டனுக்கு மட்டுமே தெரியும் என்பதால், அந்த மெய்நிகர் கரன்சிகளை மீட்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.


ஜெரால்டு காட்டன் மனைவி ஜெனிபர், சில வல்லுனர்கள் மூலம் மேற்கொண்ட முயற்சியில், வேறு கணினியில் இருந்து, சிறிதளவே மெய்நிகர் கரன்சிகளை மீட்க முடிந்தது.இவ்விவகாரம் தொடர்பாக, ஜெனிபர், கனடா நீதிமன்றத்தில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.கோர்ட் உத்தரவை பொறுத்தே, முதலீட்டாளர்களுக்கு மெய்நிகர் கரன்சி திரும்பக் கிடைக்குமா, இல்லையா என தெரியும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)