பதிவு செய்த நாள்
05 பிப்2019
23:31
புதுடில்லி:கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரின் திடீர் மறைவால், அவர் நிறுவன வாடிக்கையாளர்கள், 900 கோடி ரூபாய் மதிப்புள்ள மெய்நிகர் நாணயங்களை மீட்க வழியின்றி தவிக்கின்றனர்.
ஜெரால்டு காட்டன், 30, ‘குவாட்ரிகா சி.எக்ஸ்‘ என்ற நிறுவனம் மூலம், ‘பிட்காய்ன், லைட்காய்ன்’ உள்ளிட்ட மெய்நிகர் கரன்சி வர்த்தகத்தை நடத்தி வந்தார்.இந்நிலையில், 2018, டிசம்பரில், இந்தியாவில், ஒரு அனாதை இல்லச் சேவைக்காக வந்த ஜெரால்டு காட்டன், குடல்நோய் காரணமாக திடீரென்று மரணமடைந்தார்.
அவர் நிறுவனத்தின், 3.63 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு, 1,250 கோடி ரூபாய் மதிப்பிற்கு மெய்நிகர் நாணயங்களை தர வேண்டி இருந்தது.அதில், 1.15 லட்சம் பேருக்கு தர வேண்டிய, 900 கோடி ரூபாய் மதிப்புள்ள மெய்நிகர் நாணயங்களை, தன் பிரத்யேக கணினியில், ‘மின்னணு பணப் பை’யில் சேமித்திருந்தார்.அதை திறப்பதற்கான ‘பாஸ்வேர்டு‘ விபரம், ஜெரால்டு காட்டனுக்கு மட்டுமே தெரியும் என்பதால், அந்த மெய்நிகர் கரன்சிகளை மீட்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
ஜெரால்டு காட்டன் மனைவி ஜெனிபர், சில வல்லுனர்கள் மூலம் மேற்கொண்ட முயற்சியில், வேறு கணினியில் இருந்து, சிறிதளவே மெய்நிகர் கரன்சிகளை மீட்க முடிந்தது.இவ்விவகாரம் தொடர்பாக, ஜெனிபர், கனடா நீதிமன்றத்தில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.கோர்ட் உத்தரவை பொறுத்தே, முதலீட்டாளர்களுக்கு மெய்நிகர் கரன்சி திரும்பக் கிடைக்குமா, இல்லையா என தெரியும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|