பதிவு செய்த நாள்
10 பிப்2019
23:42
ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் சேவைகளை பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்து வரும் நிலையில், இதனால், மாதாந்திர பட்ஜெட்டில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்யும் பலனை உணர்ந்த பலரும், இந்த வசதியை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். அதிலும் உணவு பிரியர்கள், வாரந்தோறும் அல்லது அடிக்கடி, புதிய உணவு வகை மற்றும் புதிய ரெஸ்டாரன்ட்களை முயன்று பார்க்கின்றனர்.இதன் காரணமாக, உணவுக்கு என்று ஒருவர் செலவிட நினைப்பதைவிட, அதிக தொகை மாதந்தோறும் செலவிடும் நிலை ஏற்படலாம். இது, பட்ஜெட்டையும், சேமிப்பையும் பதம் பார்க்கலாம்.
உணவுக்கான தொகை தவிர, ஆன்லைன் ஆர்டருக்கான கட்டணமும் செலுத்த வேண்டும். இது சிறிய தொகை என நினைத்தாலும், தொடர்ந்து பயன்படுத்தும்போது, இந்த தொகை கணிசமானதாக இருக்கலாம்.
எனினும், ஆன்லைனில் ஆர்டர் செய்வதை, குடும்பத்துடன் வெளியே சென்று சாப்பிடுவது போன்றது என்றும், பலர் நினைக்கலாம். ஆனால், வெளியே சென்று உணவு சாப்பிட என்று ஒரு தொகையை பட்ஜெட்டில் ஒதுக்குவதே சரியாக இருக்கும்.
அது போலவே, ஆன்லைனில் உணவுக்காக செலவிடும் தொகையை கணக்கிட்டு, அதற்கென முன்கூட்டியே ஒரு பட்ஜெட்டை உருவாக்கி கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|