பதிவு செய்த நாள்
14 பிப்2019
23:34
புதுடில்லி:கடும் நிதி நெருக்கடியில் உள்ள, ‘ஜெர் ஏர்வேஸ்’ நிறுவனத்தின், கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு, அதன் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
நேற்று நடைபெற்ற, ஜெட் ஏர்வேஸ் இயக்குனர் குழு கூட்டத்தில், 8,500 கோடி ரூபாய் மதிப்பிலான, கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.இதன்படி, கடன்களை பங்குகளாக மாற்றுவது, சொத்துக்களை விற்பது, கூடுதல் பங்கு மூலதனம் மேற்கொள்வது உள்ளிட்ட கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம், கடன் அளித்த நிறுவனங்கள், பங்கு முதலீட்டாளர்கள் ஆகியோரின் ஒப்புதலுக்கு பின் நடைமுறைப்படுத்தப்படும்.ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், நடப்பு, 2018 – 19ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், 6,148 கோடி ரூபாய் வருவாய்; 587 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|